உலகம்
நியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும் பாட்டில்நோஸ் டொல்பின்கள் கரையொதிங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி தொலைதூரத்தில் இருப்பதனால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன என்றும் அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். அத்தோடுமேலும் படிக்க...
35 புலம் பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு கவிழ்ந்து விபத்து
மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் காணவில்லைமேலும் படிக்க...
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்!
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதிமேலும் படிக்க...
இன்னமும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை: சுதந்திர தினத்திலும் லெபனானில் போராட்டம்!
லெபனானில் சுதந்திர தினத்திலும், தலைநகர் பெய்ரூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். நாட்டின் 77ஆவது சுந்திர தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று, அரசியல் பிளவு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒகஸ்ட் மாதம் பெய்ரூட்டின் துறைமுக குண்டுவெடிப்பு எனமேலும் படிக்க...
டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டம்!
தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அபை அகமதின் உதவியாளர் மமோ மிஹ்ரேட்டு கூறுகையில், ‘குற்றமிழைப்பவர்களுடன் சமாதானம் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. அவர்களைமேலும் படிக்க...
பொம்பியோ, சவுதி இளவரசரை சந்திக்க சவுதி அரேபியாவிற்கு நெத்தன்யாகு இரகசிய விஜயம்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சவுதி அரேபியாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது சவுதி இளவரசரையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்மியோவையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் குறித்த செய்திகள் தொடர்பாக நெத்தன்யாகுவின்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் பி.டி.எம். கூட்டணி சார்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிறமேலும் படிக்க...
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் தாக்குதல்
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் மூலம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. எல்லையின் இருபுறமும் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் இருப்பினும் தெற்கு நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு தொழிற்சாலையை சேதப்படுத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...
தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு போராட்டம்
தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி, ஏராளமான மாணவர்கள் தலைநகர் பேங்கொக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சா-வுக்கு (Prayuth Chan-ocha) எதிராக கடந்த ஜூலை மாதம் முதல்மேலும் படிக்க...
வன்முறை அச்சுறுத்தலின் கீழ் புர்கினா பசோவில் இன்று வாக்களிப்பு
ஜிகாதி வன்முறைகளினால் இந்த ஆண்டு 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள புர்கினா பசோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் இடம்பெறுகின்றது. இருப்பினும் இன்று தேர்தலின்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் வன்முறையாளர்களினால் வாக்களிப்பு தடுக்கப்படும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமேலும் படிக்க...
பிரேசில் நாட்டில் போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு – நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால் பலத்த பாதுகாப்பு
பிரேசில் நாட்டில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கலவரம் மூண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டார். நாட்டின் தென்பகுதியில் உள்ள Porto Alegre நகரத்தின் வணிக வளாகத்தில் ஒரு பெண்ணை கருப்பின நபர் ஒருவர் மிரட்டியதாக போலீசாருக்குமேலும் படிக்க...
கேனரி தீவுகளில் 7,000 புலம் பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடம்: குடிவரவு அமைச்சர் எஸ்கிரிவா
சமீபத்தில் வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடம் வழங்க ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசர முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. 7,000 புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக தங்குமிடம் எதிர்வரும் வாரங்களுக்குள் தயாராக இருக்கும் என்று குடிவரவு அமைச்சர் ஜோஸ் லூயிஸ் எஸ்கிரிவா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 18,000க்கும்மேலும் படிக்க...
ஹொங்கொங் தலையீடு: ‘ஐந்து கண்’ கூட்டணிக்கு சீனா எச்சரிக்கை!
‘ஐந்து கண் கூட்டணி’ என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங்கில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடாமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மீது எத்தியோப்பியா குற்றச்சாட்டு!
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் டெட்ரோஸ் அதனோம் மீது, எத்தியோப்பியா குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரெஸ் அதனோம், தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாணத்துக்கு ஆதரவாக, பிறமேலும் படிக்க...
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல்: உலகநாடுகள் கடும் அதிருப்தி!
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என உலகநாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து ஆகிய உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணிமேலும் படிக்க...
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 10பேர் உயிரிழப்பு
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரில்மேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது!
ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது. இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்குமேலும் படிக்க...
மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு
அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசிமேலும் படிக்க...
போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!
போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- …
- 121
- மேலும் படிக்க