உலகம்
பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும் ஆபத்தான நிலையில் – உலக சுகாதாரஸ்தாபனம்
இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேசில் வாளி மோசமாக மாசடைந்துள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. உலக சுகாதாரஸ்தாபனம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வின்படி 2023 இல் உலகில் அதிகளவு வளிமாசடைந்த நாடுகளில் ஒன்றாக பாக்கிஸ்தான் காணப்பட்டுள்ளது. இந்தியா பங்களாதேசும் இந்த பட்டியில் இடம்பெற்றுள்ளன. நுரையீரல்களிற்குமேலும் படிக்க...
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர்
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைமேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாபதியின்மேலும் படிக்க...
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலியமேலும் படிக்க...
காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு
கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார். அத்துடன் ”மேலும் படிக்க...
பழுதடைந்த நிலையில் பல நாட்கள் கடலில் தத்தளித்த படகு ; உணவு நீர் இன்றி குடியேற்றவாசிகள் பலர் பலி
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகுdinghy நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள்இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின்மேலும் படிக்க...
ஒரே நாளில் உக்ரைன் நாட்டில் 234 வீரர்கள் பலி
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாயன்று நடந்த சண்டையில், உக்ரைன் வீரர்கள் 234 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்ததால் இருவர் பலி 22 பேர் மாயம்
இந்தோனேஷியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தென் சுலாவெசி மாகாணததின் சேலாயார் தீவுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 35 மீனவர்கள் இருந்தனர் எனவும்மேலும் படிக்க...
காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப் படுகின்றது – ஐரோப்பிய ஒன்றியம்
காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார். போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில்மேலும் படிக்க...
96 ஆவது ஒஸ்கர் விருது விழா : வெற்றியாளர்களின் முழு விபரம்
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஒஸ்கர் காணப்படுகின்றது. 1929 ஆம் ஆண்டு முதல் ஒஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 96வது ஒஸ்கர்மேலும் படிக்க...
ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றம் – வோல்கர் டர்க்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றமாகும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூறியுள்ளார். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்தவாரம் அளித்த அறிக்கையொன்றிலேயே வோல்கர் டர்க் இவ்வாறு கூறியுள்ளார். மேற்குக் கரையின்மேலும் படிக்க...
காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி
இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253மேலும் படிக்க...
நைஜீரியாவில் 200 மாணவர்கள் ஆயுதக்குழுவினால் கடத்தல்
நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்றினால் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என ஆசிரியர் ஒருவரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள கதுனா மாநிலத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதுனா மாநிலத்தின் உள்ளூராட்சி அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும் படிக்க...
பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை
உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன்மேலும் படிக்க...
நேட்டோவில் உத்தியோக பூர்வமாக இணைந்தது சுவீடன்
நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. எனினும், நேட்டோவில் சுவீடன்மேலும் படிக்க...
சிலி விமானக் கண் காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கம்
சிலியில் நடைபெறவுள்ள சர்வதேச விமானக் கண்காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கப்படும் என சிலி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2024 கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களைமேலும் படிக்க...
பெட்ரோல், டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம்: ஆய்வு முடிவு
எலக்ட்ரிக் வாகனங்கள் காற்று மாசை குறைக்கும் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசை விட, எலக்ட்ரிக் வாகனங்களிலிருந்துதான் அதிக மாசு வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.மேலும் படிக்க...
காசாவில் உடனடி யுத்த நிறுத்தம் – அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் வேண்டுகோள்
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களைதணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் உடனடியுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அன்டனி அல்பெனிசும் அன்வர் இப்ராஹிமும்மேலும் படிக்க...
காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள் : துப்பாக்கி பிரயோகம் செய்த இஸ்ரேலிய படையினர்
ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவுவாகனங்களை நோக்கிமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 120
- மேலும் படிக்க