உலகம்
இந்தோனேசியாவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்டமேலும் படிக்க...
சுதந்திர நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை: ஈரான்

“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் தெரிவித்துள்ளார். மேற்குமேலும் படிக்க...
ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்

ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை எனளஅவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் (Australia Institute) சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் திட்ட பணிப்பாளர் எம்மா ஷார்டிஸ் (Emma Shortis) தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை

ஈரானுடனான போரில் வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதாக அமெரிக்கா நம்பும் நேட்டோ நட்பு நாடுகளைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை, பென்டகனின் ஒரு உள் மின்னஞ்சல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இதில், ஸ்பெயினை கூட்டணியிலிருந்து இடைநீக்கம் செய்வதும், ஃபாக்லாந்து தீவுகள் மீதான பிரிட்டனின் உரிமை கோரல்மேலும் படிக்க...
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தளத்தில் சந்திப்பின்மேலும் படிக்க...
2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மாஸ்டர்மைண்டுகள் இன்று கூடுகின்றனர்.மேலும் படிக்க...
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அடுத்த ஒருமேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளை 15 ஆண்டுகளாக வழிநடத்தி வந்த டிம் குக், தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக ஜோன் டெர்னஸ் அப்பதவியை ஏற்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் இரண்டரை தசாப்தங்களாகப் பணியாற்றி, அதன் வன்பொருள் பொறியியல் பிரிவின்மேலும் படிக்க...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது. இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை பதிவாகியுள்ளது. இதற்கு முன், 70 சென்ரிமீற்றர் மற்றும் 40 சென்ரிமீற்றர்மேலும் படிக்க...
நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். டிரம்ப் தனதுமேலும் படிக்க...
மீண்டும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரானிய கடற்படை அறிவிப்பு?

நேற்று முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் துறைமுக முற்றுகை தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களுக்கு, ஈரானிய கடற்படை வானொலிமேலும் படிக்க...
ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மா் புத்தாண்டை முன்னிட்டுமேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (18) ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஊடகங்கள்மேலும் படிக்க...
ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்குமேலும் படிக்க...
லெபனானில் பேரவலம்: லட்சக் கணக்கானோர் இடம்பெயர்வு
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமைமேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11ஆம் திகதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறத்திலும்மேலும் படிக்க...
போர்ச் சேதங்களுக்கு அமெரிக்கா – இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரும் ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், உருக்கு ஆலைகள் மற்றும் இராணுவமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 166
- மேலும் படிக்க


