உலகம்
நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றார் நெதன்யாகு!
71 வயதுடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார். பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட குறித்த தடுப்பூசி பெற்றபோது, நெதன்யாகு இஸ்ரேலின் தடுப்பூசி பிரசாரத்தை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். டெல் அவிவ் அருகேமேலும் படிக்க...
ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்!
ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணுமேலும் படிக்க...
ஜோ பிடனின் நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட தயார்: சீனா அறிவிப்பு!
அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பிடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. ஜோ பிடன் பதவியேற்ற பிறகு இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் படிக்க...
கிளர்ச்சிப் படை தலைவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி: எத்தியோப்பியா அரசாங்கம்!
எத்தியோப்பியா வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், தப்பியோடிய கிளர்ச்சிப் படையின் தலைவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் தெரிவிப்பவர்களுக்கு 10 மில்லியன் பிர்ர் (260,000 அமெரிக்க டொலர்கள்) வெகுமதியை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்களைப் பிடிக்க உதவும்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொவிட்-19: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சுய தனிமைப் படுத்தல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தொடரில் இம்மானுவேல் மக்ரோன் கலந்துக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டமேலும் படிக்க...
இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலையால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையைமேலும் படிக்க...
நவல்னியை கொலை செய்ய தேவைப் பட்டிருந்தால் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்: புடின்
கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால், அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் கலந்துக்கொண்ட வருடாந்திர ஊடக சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடுமேலும் படிக்க...
ஐரோப்பாவில் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடையும்!
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின்மேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களில் 17பேர் மீட்பு- இருவர் உயிரிழப்பு!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 17 மாணவர்கள் மீட்கப்பட்டதாக கட்சினா மாநில ஆளுநர் அமினு மசாரி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர்மேலும் படிக்க...
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்குமேலும் படிக்க...
நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்!
சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம்மேலும் படிக்க...
புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் – ஆய்வில் தகவல்!
புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்பது ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணைமேலும் படிக்க...
இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 65ஆயிரத்து 11பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
உலகமெங்கும் பெரு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள 20 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்!
உலகமெங்கும் முக்கியமான பெரு நிறுவனங்களில் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் செய்திவெளியிட்டுள்ளது. உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில்மேலும் படிக்க...
ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது சிங்கப்பூர்!
ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு, சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் முதல் தடுப்பூசி போட எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தமேலும் படிக்க...
பயங்கரவாத பட்டியலில் இருந்து அமெரிக்கா சூடானை நீக்கியது!
கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம்மேலும் படிக்க...
வர்த்தகப் பேச்சு வார்த்தைகளை நடத்த ஒப்புதல்: பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனும் முன்னர் அறிவித்திருந்தனர்.மேலும் படிக்க...
உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை உலகளவில் வைரஸ் தொற்றினால், ஏழு கோடியே 26இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 16இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்துக்கு விரைந்த முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம்!
ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில், டைக்ரே பிராந்தியத்தின் தலைநகருக்கு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம் விரைந்துள்ளது. கடந்த மாதம் சண்டை வெடித்ததில் இருந்து முதல் அரசு சாரா உதவிப் பிரிவு, எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயின் தலைநகருக்குமேலும் படிக்க...
இத்தாலியில் புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !
இத்தாலியில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை 761 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை புதிதாக நேற்று 19 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- …
- 121
- மேலும் படிக்க