உலகம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு
ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில்மேலும் படிக்க...
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்
ஜப்பான் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் இன்று நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கும்மேலும் படிக்க...
சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது!
சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம்மேலும் படிக்க...
வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில் ரஷ்யாவின் மத்திய, வோல்கா மற்றும் யூரல்மேலும் படிக்க...
2021இல் மேலும் 40 வீதம் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் – ஐ.நா. அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டில் 33 பேரில் ஒருவருக்கு உணவு, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்?
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம்மேலும் படிக்க...
மூன்று மாதங்களுக்கு பிறகும் கொவிட்-19 நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பு!
கொவிட்-19 நோயாளிகள் பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக நுரையீரல் அசாதாரணங்களை இன்னும் கண்டறியக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 10 நோயாளிகளைப் பற்றிய ஒரு ஆய்வில், வழக்கமான ஸ்கேன்களால் எடுக்கப்படாத சேதங்களை அடையாளம் காண ஒரு புதிய ஸ்கேனிங் நுட்பம்மேலும் படிக்க...
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக் கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழி வகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட ஒரு நோயால் மேலதிகமாக ஒரு இலட்சம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும்மேலும் படிக்க...
இத்தாலிய தீவான சார்டினியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மூன்று பேர் உயிரிழப்பு- இருவரைக் காணவில்லை!
இத்தாலிய தீவான சார்டினியாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை. இத்தாலியின் நூரோ மாகாணத்தில் உள்ள தீவான சார்டினியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருகின்றது. இதனால் நூரோவின் பிட்டிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டு வெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை!
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும் பணிகளை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுலவேசி தீவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தலையைமேலும் படிக்க...
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல், பெல்ஜியம் மற்றும் பிரேசில் ஆகியமேலும் படிக்க...
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார மையம்
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், உலக அளவில் இதுவரை 6.08மேலும் படிக்க...
ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
ஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள்மேலும் படிக்க...
சிலியில் வன்முறையாக மாறிய போராட்டம்: பலர் காயம்!
சிலியில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி முறை ஆகியவற்றில் சீர்திருத்தம் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில் அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டுமேலும் படிக்க...
புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் ரோச் கபோர் மீண்டும் வெற்றி!
புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் தேசிய சுயாதீன தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி ரோச் கபோர் மீண்டும் தலைவராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு புர்கினா பாசோவின் தலைவராக அவர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபோர், 57.87மேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்!
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் தீவிரம் காட்டிவரும் மாணவர்களை, ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக தாய்லாந்து பொலிஸார், ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனும் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்குமேலும் படிக்க...
டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்!
எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- …
- 121
- மேலும் படிக்க