Main Menu

பிரேசில் நாட்டில் போலீஸ் தாக்‍குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு – நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால் பலத்த பாதுகாப்பு

பிரேசில் நாட்டில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் காவல் துறையினரின் தாக்‍குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கலவரம் மூண்டதால் ஏராளமான போலீசார் குவிக்‍கப்பட்டார்.

நாட்டின் தென்பகுதியில் உள்ள Porto Alegre நகரத்தின் வணிக வளாகத்தில் ஒரு பெண்ணை கருப்பின நபர் ஒருவர் மிரட்டியதாக போலீசாருக்‍கு தகவல் கிடைத்தது. அவசர அழைப்பு எண் மூலம் அந்தப் பெண் உதவி கோரியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், கருப்பின மனிதரை அடித்துக்‍கொன்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆயிரக்‍கணக்‍கான பொதுமக்‍கள் ஒன்று சேர்ந்து சம்பவம் நடந்த வணிக வளாகத்தை அடித்து நொறுக்‍கினர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக நாட்டின் முக்‍கிய நகரங்களில் போலீசார் குவிக்‍கப்பட்டனர்.

பகிரவும்...