Main Menu

பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் தாக்குதல்

பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் மூலம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

எல்லையின் இருபுறமும் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் இருப்பினும் தெற்கு நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு தொழிற்சாலையை சேதப்படுத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காசாவைக் கட்டுப்படுத்தும் ஐ.எஸ். குழுவான ஹமாஸுக்குச் சொந்தமான பல இராணுவ தளங்களில் அதன் விமானம் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும் ஹமாஸ் குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு இராணுவ அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...