கவிதை
“பொன்மனச் செம்மல்” (நினைவுக்கவி)
மக்கள் திலகம் மனிதருள் மாணிக்கம் மருதூர் கோபாலமேனன் புத்திரன் மக்களால் போற்றப்பட்ட மாண்பு மிக்க தலைவன் பொன்மனச் செம்மல் புரட்சித் தெய்வத்தை மார்கழித் திங்கள்24 இல் மனதில் நினைத்திடுவோம் ! ஏழைகளின் தோழன் ஈழவரின் காவலன் தாய்க்குலத்தின் தலைமகன் தமிழ் இனத்தின்மேலும் படிக்க...
“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )
நல்லை நகர்ப் பதியினிலே எல்லையில்லாப் புகழ் நாவலர் வல்ல தமிழை வளமுறக் காக்கவே மார்கழித் திங்கள் பதினெட்டிலே ஞாயிறாய் உதித்தார் நற்றமிழுக்காய் ! தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்திடவே திடமான மனதுடனே தீவிரமாய் பணியாற்றி புராண ஆகமங்களை பல்லுலகும் அறியும் வண்ணம்மேலும் படிக்க...
“தேசத்தின் குரல்” (நினைவுக்கவி)
மீன்பாடும் தேன்நாட்டில் பிறந்து இலண்டன் மாநகரில் வாழ்ந்து எம் தேசத்தின் குரலாய் மிளிர்ந்து தமிழினத்தின் குரலாய் ஒலித்து நிரந்தரமாய் ஓய்வு எடுத்ததே எம் தேசத்தின் குரல் மார்கழித் திங்கள் பதின்நான்கிலே ! எம் உரிமைக்கான தேவையை உலகப் பரப்பில் நிலைநாட்டி பேச்சுமேலும் படிக்க...
“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)
மானிட வாழ்வின் உரிமை பேணி மானிட உரிமையைக் காத்திடவே மனிதத்தைப் போற்றிடும் திங்களாக மார்கழித் திங்கள் பத்தினை மனித உரிமை தினமாக்கியதே ஐ.நா.வும் ! மனிதத்தின் மேன்மையே மனிதநேயம் மனிதநேயத்தை மிஞ்சியது உயிர்நேயம் அன்பு பண்பு பாசம் கொண்டு உயிர்களிடம் நேசம்மேலும் படிக்க...
“ மகாகவி பாரதியார் “
பாட்டிற்கு ஒரு புலவன் பைந்தமிழ் பாவலன் முண்டாசுக் கவிஞன் முறுக்கு மீசைக்காரன் சிந்துக்கும் தேசீயத்திற்கும் சந்தக்கவிகள் தந்தவர் எட்டையபுரத்தில் உதித்தாரே மார்கழித் திங்கள் பதினொன்றிலே ! மாடனை, வேடனை, காடனை அடக்கினார் தன் கவிக்குள் வீட்டிற்குள் முடங்கிய பெண்களை வேகமாய் கூவியழைத்தார்மேலும் படிக்க...
“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)
கார்த்திகைத் திங்கள் இருபத்தியொன்றுஎம் தேசமறவர் எழுச்சி வாரம்போர்க்கால மேகங்கள்புடை சூழ்ந்த வேளையிலேகார்கால மேகங்களாய்கரிகாலன் வழி நின்றுகளமாடிச் சமராடி களப்பலியானவீர மறவர்களை நினைத்திடும் வாரமிது ! தேசத்திற்காய் தேசீயத்திற்காய்தம்முயிரை ஆகுதியாக்கிய தீரர்களைஅறப்போர் புரிந்த மறவர்களைபுது நானூறு படைத்திட்ட வீரர்களைபுதுப்பரணி பாடிய காவிய சீலர்களைமேலும் படிக்க...
யாரழிவார் நீரிழிவால்?(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )
விழிப்புணர்வை ஏற்படுத்த வழி சமைத்த ஐ.நா.வே கார்த்திகை பதின்நான்கினை நீரிழிவு தினமாக்கி உயிரழிவினைத் தடுக்கவும் அறியாமை இருளில் இருந்து மக்களை விழிப்படைய செய்யவும் ஆக்கி வைத்த உம் பணிக்கு நன்றி ! வாழ்வியல் நகர்வில் வீட்டிற்கு ஒருவரென விடாமல் துரத்துகிறது நீரிழிவுமேலும் படிக்க...
“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )
ஈழம் தந்த பேரறிஞனை நூற்றாண்டு கண்ட வேந்தனை என் ஊரின் மைந்தனை கார்த்திகைத் திங்கள் ஐந்தில் நினைத்திடுவோம் பிறந்த நாளில் ! ஈழத்து இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டு ஈடு இணை இல்லாது இலக்கியப் படையல்களை கட்டுரைகளாய் கவிகளாய் பாடநூல்களாய் சிறுவர்மேலும் படிக்க...
“ மனதோடு நிழலாடும் என் ஊர் “
வேல் வந்து அணைந்ததனால் வேலணை எனப்பெயராகி வித்துவான்களையும் அறிஞர்களையும் பண்டிதர்களையும் புலவர்களையும் நிறைவாகக் கொண்ட என்னூரின் நினைவழியா ஞாபகங்கள் நிழலாடுதே என் மனசோடு ! வந்தாரை வரவேற்கும் வானுயர்ந்த பனைமரங்கள் வரவேற்று கையசைக்கும் வாளிப்பான வாழைமரங்கள் பச்சைக் கம்பளம் போர்த்திய பசுமைமேலும் படிக்க...
” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)
ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி சிவஞானசுந்தரம் இவரின் இயற்பெயர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றினார் பெரும்பங்கு முதற்சிறுகதையாக ஆக்கினார் மரிய மதலேனாவை நாடகத்திலும், விமர்சனத்திலும் காட்டினார் ஆர்வம் ! ஆக்கினார் பல சிறுகதைத் தொகுப்புக்களை மொழி பெயர்த்தார் பிற நாட்டுக் கதைகளை சேக்ஸ்பியரின்மேலும் படிக்க...
“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)
அகரம் எமக்குக் கற்றுத்தந்து சிகரமாய் எமை ஏற்றி வைத்து சிற்பியாய் எமைச் செதுக்கி ஏணியாய் ஏற்றி வைத்த எங்கள் ஆசான்களே ஆசிரியர் தினமாம் அக்டோபர் ஐந்தில் உங்களைப் போற்றுகின்றோம் ! நல்லவராய் வல்லவராய் நாம்வாழ நல்லொழுக்கம் கற்றுத் தந்து பாடங்களை எமக்காகமேலும் படிக்க...
”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)
தமிழ் சினிமாவின் தவப்புதல்வன் தன்னிகரில்லா நடிப்பின் இமயம் நடிப்புலக வரலாற்றின் சரித்திரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞன் திங்களாம் ஐப்பசி ஒன்றில் உதித்தாரே ! நடிப்பிற்கே நடிப்பைக் கற்றுக் கொடுத்தவர் தன்னையே நடிப்பிற்காய் அர்ப்பணித்தவர் கலைஞரால்மேலும் படிக்க...
தியாக மைந்தன் திலீபன் (நினைவுக்கவி)
தேரோடும் வீதியிலே நல்லூரான் முன்றலிலே ஊரே திரண்டிருக்க ஊரெழு பெற்ற மைந்தன் பன்னிருநாள் யாகத்தில் தியாக வேள்வியில் இன்னுயிரைத் தியாகம் செய்தானே புரட்டாதித் திங்கள் இருபத்தியாறினிலே ! தேசம் மலர தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை வைத்து காணிக்கை ஆக்கிய தியாகியேமேலும் படிக்க...
” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமதில் அன்னை மண்ணாம் சிறுப்பிட்டியில் அவதரித்தார் தாமோதரனார் புரட்டாதித் திங்கள் பன்னிரெண்டிலே ! அன்னை மொழியாம் எம் தமிழை அழிய விடாது பேணிக் காத்து தமிழின் அருமை பெருமைகளை எதிர்கால சமூகத்திற்கு எடுத்தியம்பிய செம்மல் தமிழ் மொழியின் அழியாச்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 10
- மேலும் படிக்க