கவிதை
உலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)
அகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித் தந்ததே ஐ.நாவும் திங்களாம் புரட்டாதி இருபத்தியொன்றை ! சமாதானமும் அகிம்சையும் சர்வ தேசமெங்கும் மலரவும் தீவிரவாதமும் போர்களும் தூர விலகிப்மேலும் படிக்க...
வாழ்க்கை வாழ்வதற்கே
உந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே…! நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்…! மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்வேரோடு வெட்டி எறி…! அது புதிதாய் வளரட்டும்…! உன்னை அவமானாம்படுத்திய தருணங்களைஒருபோதும் மறக்காதேஅவை தான் உந்தன்உயர்வுக்கு காரணமாய்மேலும் படிக்க...
“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)
ஏக்கம் மனதை வாட்டதேக்கமாய் நினைவுகள் புதையதுக்கம் தொண்டையை அடைக்கதூக்கத்தைத் தொலைத்துஏக்கத்தை தேக்கமாக்கிதேடும் உறவுகளைத் தேடித் தேடிபூத்தவிழி பூத்திருக்கதொடர்கிறது காத்திருப்பு ! வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை ! உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கிஉருக்குலைந்துமேலும் படிக்க...
“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)
வன்முறைகளுக்கு சமாதி கட்ட வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட மாக்களை மண்ணிலிருந்து விரட்ட மலரட்டும் எங்கும் மனிதநேயம் மகிழட்டும் மனித உள்ளங்கள் நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் ! இருகரம் கூப்பி வணங்குவதை விட ஒரு கரம் நீட்டி உதவுவது உன்னதமானது என்ற உயரிய நோக்கத்தைமேலும் படிக்க...
நவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)
நவாலியூர் ஜோதி நாமமோ சோமசுந்தரனார் தங்கத் தாத்தாவென பங்கமின்றி அழைத்தனரே பாசம் மிகப் பொங்கி ! ஆங்கிலமொழி ஆட்சியிலே அன்னை மொழியை, அரும்பெரும் சைவத்தை அழிய விடாமல் காத்து நாவலரின் பணி தொடர்ந்தாரே நவாலியூர் சோமசுந்தரனார் ! வட்டுக் கோட்டையிலே கட்டானமேலும் படிக்க...
“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”
எண்பத்தி மூன்று ஆடியில் ஆடித்திங்கள் இருபத்திமூன்றில் அரங்கேறிய அனர்த்தங்கள் கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள் வெறுப்பாகி நீறு பூத்த நெருப்பாகி தணலாகக் கொதிக்கிறதே இன்றும் ! இனவாதம் தூண்டப்பட்டு அரசியல் இலாபம் பேணப்பட்டு கொலைகள் அரங்கேறப்பட்டு குளிர் காய்ந்த கொடியநாள் கறுப்புமேலும் படிக்க...
“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)
பாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து தாளக்கட்டு எமைக் கட்டிப்போட ஆர்மோனியப் பெட்டியால் மெட்டுப் போட்டு எம் ஹார்மோன்களை எல்லாம் எழிற்சி பெற வைத்த இசையுலகின் முடிசூடா மன்னனே ஏழிசையின் இமயமே ! உலக இசையைத் தமிழில் புகுத்தி தமிழிசைக்கு புகழும் சேர்த்துமேலும் படிக்க...
“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)
போராலும் போராட்டங்களாலும் வன்முறையாளர்களின் வன்முறைகளாலும் வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு அண்டை அயல் நாடுகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஏதிலிகளென்ற பெயரும் தாங்கி அடைக்கலம் தேடியவர்கள் இவர்கள் ! தம் உயிரைக் காப்பாற்ற உயிர்களையே பணயம் வைத்து உத்தரவாதமில்லாத கடல்மேலும் படிக்க...
“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)
ஊரைப் பெருமைப் படுத்த காரையென்ற பெயர் தாங்கி தாரை தாரையாக படைப்புக்களைத் தந்த காரை சுந்தரம்பிள்ளை ஆசானை என் இந்துநாகரீக ஆசானை ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த அறிஞனை பன்முகப்பட்ட திறமை கொண்ட ஆசானை நினைவில் நிறுத்திடுவோம் !மேலும் படிக்க...
“அறிவாலயம் அனலானதே” (01/06/2020)
தமிழரின் நிலையான சொத்து தலைமுறை தலைமுறையாய் தடங்கள் பல பதித்து அறிஞர் பெருமக்களையும் ஆசான்களையும் உருவாக்கி அறிவுப்பசி தீர்த்த அறிவாலயம் ஆசியாவின் மிகப்பெரிய அறிவுச் சுரங்கம் யாழ் குடாநாட்டின் அறிவுப் பொக்கிஷம் அனலுக்குள் பொசுங்கியதே ஆனித் திங்கள் ஒன்றிலே ! முப்பத்திமேலும் படிக்க...
“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )
தந்தை என்ற வார்த்தைக்குள் மந்திரங்கள் ஆயிரம் சிந்தை நிறைந்த தந்தையின் விந்தைகளோ பாயிரம் பாசத்தையும் விஞ்சி நிற்கும் தந்தையென்ற இயந்திரம் ! முகவரிக்கு முதலெழுத்தாகி முழுமதியாக எமை நிறைத்து முழு மூச்சாகவே காத்து முனைப்போடு சுமையைத் சுமந்து அவனியிலே நாம் உயர்ந்திருக்கமேலும் படிக்க...
“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)
புனிதப்பணி செய்த புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளே செவிலியர் தினமாகி சேவை போற்றும் நாளாகி உலக செவிலியர் தினமாகியதே இன்றைய நாள் 200 வது பிறந்தநாளாகிறது விளக்கேந்திய பெருமாட்டியை நினைவில் கொள்வோம் நாமும் ! வெள்ளைப் புறாக்களென கொள்ளை அன்போடுமேலும் படிக்க...
“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)
அம்மா என்ற வார்த்தைக்குள் அகிலமே அடக்கம் அன்னைக்கு ஈடாக அகிலத்தில் ஏதுமில்லை அன்பால் அரவணைத்து ஆறுதல் தந்திடுவாள் ! களங்கம் இல்லாத உறவு கபடம் தெரியாத உள்ளம் சுயநலம் பேணாத ஜென்மம் தன்னலமே இல்லாத ஜீவன் தாயென்ற கண்கண்ட தெய்வம் !மேலும் படிக்க...
“மே தினத்திற்கான சிறப்புக்கவி”
மேதினியில் மேதினம்மே ஒன்றில் மேம்படஉழைப்பாளிகள் ஒருமித்துஒன்று கூடிக் குரல் கொடுத்துபோர்க்கொடி தூக்கி போராடிமேன்மையோடு பூத்ததுமேலான உழைப்பாளிகள் தினம் ! அடிமை வாழ்வும்வேதனக் குறைப்பும்வேலைப்பழுவும் முதலாளித்துவமும்ஆதிக்கம் செலுத்திய வேளைவெடித்தது சிக்காக்கோவில்தொழிலாளர் புரட்சி ! உரத்த குரலில் போராடிஉழைக்கும் வர்க்கத்திற்காகவேகண்டனம் செய்தனர் தொழிலாளர்கள்கிடைத்தது வெற்றிமேலும் படிக்க...
“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி
இலக்கியத்தின் உயிர்நாடி வரலாற்றில் பொக்கிஷமாகி சித்திரைத் திங்கள் இருபத்திமூன்று சர்வதேச புத்தக தினமாகி புத்தகங்களைக் கொண்டாடும் தினமாகி வாசிப்பும் நேசிப்பும் சுவாசிப்பும் வாழ்வியல் பொக்கிஷங்களாகி வனப்பாக்குதே புத்தகங்கள் ! அழகான அட்டைப்படம் உள்ளே அச்சிடப்பட்ட காகிதம் தொட்டதை எடுத்து மனதைப் பதித்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 10
- மேலும் படிக்க