கவிதை
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்
தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே… உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே…, உன் பால்மேலும் படிக்க...
இலங்கையின் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள்!
ஈழத்தமிழரைக் கொன்றால் என்ன இந்தியா நமது தேசம்தான்!! இலங்கைக்குத் துணையாய் நின்றால் என்ன இந்தியா நமது தேசம்தான்!! “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”! பாரதி சொன்னதை மறக்காதே – என்ன பாதகம் செய்தாலும் வெறுக்காதே!மேலும் படிக்க...
அப்துல் கலாம் – புன்னகை விருட்சம்
பூமிப் பந்தில்ஒரு பூப்பந்துபுன்னகை விருட்சம்..அக்கினிச் சிறகில்அலர்ந்த அரும்புஆகாய வியப்பு..அறிவிய லறிவின்உலகச் சூரியன்அமைதி நிலா..எளிமைப் பதிவின்முதல் அகராதிஇதய சாரதி..கனவு அணுவின்நினைவுத்துகள் அனுபவ சக்தி..இராமேசுவரத் தீவின்இந்திய தேவன்தேசமான(ண)வர்..உலக நாடுகளின்உயிரியக்கிஅமைதிப் புறா..எதிரிகளில்லாகதிரியக்கம்இசைப்பிரியர்..ஓய்வே இல்லாஇயற்கைக்கோள் உயர்வுக்கலம்..எவரையும் ஏவார்ஏவியதொன்றேஏவுகணை..எவரும் அணுகலாம்எண்ணு முன்னிவர்அருகிலாம்..‘நான்’ என்பதைச்சிறிதும் விரும்பா‘நானோ’ விளம்பி..அரசுக் காசில்செலவு எழுதாஅரசமேலும் படிக்க...
வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் வைகாசிப்பொங்கல் விழா!
முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை) -நீ(தி)தீ- என்ன குறை வைத்தோம் உன்னில், ஏது குறை சொன்னோம். பல பண்பாட்டுத்திருவிழாக்களை ஆடிக்களித்திருந்த ஊர்களில் இருந்தல்லவா காவடிகள் தூக்கி வந்தோம். தீச்சட்டி ஏந்தி வந்தோம். பால்குடம் எடுத்து வந்தோம்.மேலும் படிக்க...
எங்கே போவேன்?
அப்பான்னு நினச்சேன் அசிங்கமாய்த் தொட்டான் சகோதரன்னு பழகினேன் சங்கடப்படுதினான்.. மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்… உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றது.. பாதுகாப்பை நாடி பள்ளிக்குச் சென்றேன் ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையுமென்றான்.. நட்புக் கரமொன்று நண்பனாய்த் தலைகோதி தூங்கென்றான் மரத்தமேலும் படிக்க...
முத்துக்குமரா!
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில்மேலும் படிக்க...
இருப்பும் இறப்பும்
அந்த மரம் வெகு அமைதியாக நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து கனிந்து நின்றது பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த குண்டுகள் ஷெல்கள் அதன் உடலைத்துளைக்கத் தொடங்கின தினமும் காயம் பல பட்டு வலி சுமந்தாயினும் உயிர் பிழைத்து நின்றது அம்மாமரம்மேலும் படிக்க...
சொல்லதிகாரம்
‘கொல்’ ‘கொள்ளையடி’ சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”தழுவு” ”முத்தமிடு” கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”ஆராரோ” ”சனியனே” தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உனக்கெப்போது கல்யாணம்?” விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உருப்போடு” – உருப்படமாட்டாய்” வகுப்பறைகள் அதிகம் கேட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10