Main Menu

“ மகாகவி பாரதியார் “

பாட்டிற்கு ஒரு புலவன்
பைந்தமிழ் பாவலன்
முண்டாசுக் கவிஞன்
முறுக்கு மீசைக்காரன்
சிந்துக்கும் தேசீயத்திற்கும்
சந்தக்கவிகள் தந்தவர்
எட்டையபுரத்தில் உதித்தாரே
மார்கழித் திங்கள் பதினொன்றிலே !

மாடனை, வேடனை, காடனை
அடக்கினார் தன் கவிக்குள்
வீட்டிற்குள் முடங்கிய பெண்களை
வேகமாய் கூவியழைத்தார்
வறுமையின் கொடுமையை
பொறுமையாய் சாடினார்
விதியையும் மதியையும்
கவிக்குள் கலக்கினார் !

தாய்த்தமிழை தாயகவிடுதலையை
தாய்நாட்டை பெண்விடுதலையை
சாதி பேதமற்ற சமுதாயத்தை
தமிழ்ச் சாட்டையால் தகர்த்தெறிந்தார்
கவிதை எனும் ஆயுதத்தால்
மக்களை வசப்படுத்தினார் !

அறியாமை இருளை அறவே போக்கினார்
அச்சத்தைப் போக்கி வீரத்தை உணர்த்தினார்
சொல் எனும் வில்லினால் சுட்டெரித்தார்
குருதி கொப்பளிக்க சுதந்திர கீதமிசைத்தார்
தமிழால் மகாகவி பெருமை பெற்றார்
மகாகவியால் தமிழே பெருமை பெற்றதுவே !

கவியாக்கம்: ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...