Main Menu

“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)

அம்மா என்ற வார்த்தைக்குள்
அகிலமே அடக்கம்
அன்னைக்கு ஈடாக
அகிலத்தில் ஏதுமில்லை
அன்பால் அரவணைத்து
ஆறுதல் தந்திடுவாள் !

களங்கம் இல்லாத உறவு
கபடம் தெரியாத உள்ளம்
சுயநலம் பேணாத ஜென்மம்
தன்னலமே இல்லாத ஜீவன்
தாயென்ற கண்கண்ட தெய்வம் !

பரிவினைக் காட்டி
பக்குவமாய் அணைத்திடுவாள்
பலனை எதிர்பார்க்காமலே
பாசத்தை ஊட்டிடுவாள்
தன்பசி மறந்து
எம்பசி உணர்வாள் – அவளே
தாயென்ற தேவதை !

கடவுள் தந்த வரமாய்
தவமாய் கிடைத்த உறவு
அவனியின் ஆதாரம்
அன்பின் அரங்கம்
ஆற்றலின் சுரங்கம்
உயிர் எழுத்தின் வேதம்
உண்மையின் நாதம்
உயிர் தந்த தேவதை
அவளே அன்னை !

கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...