Main Menu

“அன்னை பூபதித்தாய்”

அன்னை பூமிக்காய்
அமைதி வாழ்வு வேண்டி
அகிம்சை வழியில்
அறப்போர் தொடுத்து
அமைதிப் படையிடம் அடிபணியாது
எம் மண்ணிற்காய் வித்தானவர்
அன்னை பூபதித்தாய் !

அன்னைக்கு அன்னையாய்
அன்னையர் முன்னணியின் தலைவியாய்
இந்தியப் படைக்கு தக்க பாடம் புகட்ட
மாதர்குலத்திற்கு எழிற்சிப் பாதை அமைத்து
மாமாங்கப் பிள்ளையாரை வணங்கி
அமைதியோடு உண்ணா நோன்பினைத் தொடங்கி
அன்னையர் முன்னணியை வழிப்படுத்தினாரே !

காந்தி தேசத்தின் முகத்திரை கிழிய
கோரிக்கை நிறைவேறும் வரை
உண்ணா நோன்பினை நோற்றாரே
உலகிற்கும் எடுத்து இயம்பினாரே
உதடுகள் வற்றி நா வரண்ட போதும்
உறுதியாய் இருந்தாரே உண்ணா நோன்பில் !

ஒரு தாயின் ஒப்பற்ற தியாகமாக
பெண்ணினத்தின் எழிற்சி வடிவமாக
நெஞ்சுறுதி கொண்ட வீரத் தாயாக
தமிழ் மண்ணுக்கு தம்முயிரை
முழுமையாய் அர்ப்பணித்து
தன்னை ஆகுதியாக்கி கொண்டாரே !

கவியாக்கம்…… ரஜனி அன்ரன்

பகிரவும்...