உலகம்
இத்தாலியில் இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த உணவகங்கள்- மதுபானக்கூடங்கள் திறப்பு!
இத்தாலியில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இத்தாலி, சிறப்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததால்,மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர். அத்துடன், இந்த வைரஸ்மேலும் படிக்க...
மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம்மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் முரண்பாடு? பதவியை இராஜிநாமா செய்தார் பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர்!
பிரேஸில் கடுமையான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். பிரேஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக்கின்மேலும் படிக்க...
பயணக் கட்டுப் பாடுகளை எளிதாக்குகிறது இத்தாலி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை, இத்தாலிய அரசாங்கம் எளிதாக்கவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி முதல் பிராந்தியங்களுக்கிடையில் சுதந்திரமாக செல்ல இத்தாலியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சர்வதேச பயணமும் அனுமதிக்கப்படுகின்றது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இத்தாலிமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் நெருக்கடி: போர்த்துக்கலின் பொருளாதாரம் முதல் காலாண்டில் வீழ்ச்சி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடி காரணமாக, போர்த்துக்கலின் பொருளாதாரம் முந்தைய மூன்று மாத காலப்பகுதியிலிருந்து முதல் காலாண்டில் 3.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு வருடத்திற்குமேலும் படிக்க...
உணவகங்கள்- முடி திருத்துமிடங்களை மீண்டும் திறக்க போலந்து திட்டம்!
போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறைந்து வருவதால், உணவகங்களையும் முடி திருத்துமிடங்களையும் மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்கும் ஒரு அங்கமாக இந்த முடிவுமேலும் படிக்க...
ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ்மேலும் படிக்க...
சீனாவுக்கு மீண்டும் சிக்கல்: 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முதல் முதலாக கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
உலக தாதியர் தினம் இன்று…!
உலகமே கொரோனாவின் பிடியில் உள்ள சூழலில், உலக தாதியர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனா வைரஸினால் இவர்களது சேவையை முடக்க முடியவில்லை. இந்த சூழலிலும் தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் தாதியர்களால் தான் உலகமேமேலும் படிக்க...
2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு முகநூல் கூகுள் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்துமேலும் படிக்க...
அனைத்து கட்டுப்பாடுகளையும் எளிதாக்குகிறது நியூஸிலாந்து!
சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்திவரும் நியூஸிலாந்து அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு சந்தோஷமான செய்தியொன்றினை அறிவித்துள்ளது. நியூஸிலாந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டினை முதற்கட்டமாக எளிதாக்கத் தொடங்கிய ஒருமேலும் படிக்க...
சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!
வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர்மேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,012பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 88பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனாமேலும் படிக்க...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ரஷ்யா!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த ஆறாவது நாளும் பதிவானது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பிரேஸில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா வைரஸ்!
பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 59 வயதான முன்னாள் இராணுவ ஜெனரலான ஒட்டாவியோ ரெகோ பரோஸ், நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனைமேலும் படிக்க...
ரஷ்யாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,559பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 37பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் பிங் லியூ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை,மேலும் படிக்க...
வட கொரிய தலைவர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் மேற் கொள்ளவில்லை: தென்கொரியா
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. 36 வயதான கிம் ஜோங் உன், கடந்த ஏப்ரல் 12ஆம் திகதிக்கு பின்னர், வடகொரியாவில்மேலும் படிக்க...
கொவிட்-19 விவகாரத்தில் உலகளாவிய தொழில் நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்: போப் ஆண்டவர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான மருத்துவ வசதி பெறுவதில், உலகளாவிய அத்தியாவசிய தொழில்நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அப்போஸ்தல அரண்மனை நூலகத்தில் இருந்தபடி ஆசி வழங்கிய பின்னர், மக்கள் முன்னிலையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- …
- 121
- மேலும் படிக்க