Main Menu

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 65ஆயிரத்து 11பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை வைரஸ் தொற்றினால் 18இலட்சத்து 55ஆயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றினால் இதுவரை ஆறு இலட்சத்து 75ஆயிரத்து 109பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 95பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுவரை 11இலட்சத்து 15ஆயிரத்து 617பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...