உலகம்
அமெரிக்காவின் கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை: வடகொரியா தலைவர்!
அமெரிக்காவின் கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா தங்களது மிகப்பெரியமேலும் படிக்க...
ஸ்பெயினில் கடுமையான பனி: போக்குவரத்து ஸ்தம்பிதம்!
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து போயுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை மறை 35 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் தரையெங்கும் பனி உறைந்து காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியதால்மேலும் படிக்க...
தன்னிச்சையாக தடுப்பூசி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது- உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மருந்து நிறுவனங்களுடன் தனித்தனியாக தடுப்பூசி ஒப்பந்தங்களுகக்கான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இன்று அறிவித்துள்ளார்.,பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர்மேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் லீ சியன் லூங், நேற்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி மறுப்பு – WHO அதிருப்தி
கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி வழங்காமையினை முன்னிட்டு தான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியாஷூஸ் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின்மேலும் படிக்க...
41 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்!
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது 41 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகைமேலும் படிக்க...
தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் உயிரிழப்பு!
ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் இறந்துள்ளார். 41 வயதான சோனியா அசெவெடோ, புத்தாண்டு தினத்தன்று வீட்டில் ‘திடீர் மரணம்’ அடைந்தார். பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை பிற்பகுதியில் நடைபெறும்மேலும் படிக்க...
கொரோனாவை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கும் என எச்சரிக்கை
கொரோனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய்மேலும் படிக்க...
கென்யாவில் 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு!
கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு நேற்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பாடசாலைகளுக்கு சென்றனர். எனினும், பாதுகாப்பு நடவடிக்கையான பாடசாலைகளுக்குமேலும் படிக்க...
மெக்ஸிகோவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு!
மெக்ஸிகோவில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூவோ லியான் மாகாணத்தில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 32 வயது பெண் மருத்துவருக்கு திடீரெனமேலும் படிக்க...
ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார். 49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு :உலகளவில் இஸ்ரேல் முன்னிலை
உலகின் மிக உயர்ந்த விகிதமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இஸ்ரேல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் 100 பேருக்கு 11.55 பேர் என்ற அடிப்படையிலும் பஹ்ரைன் 3.49 பேர் என்ற அடிப்படையிலும்மேலும் படிக்க...
ஜூலியன் அசாஞ்சையை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது குறித்து நாளை தீர்ப்பு
விக்கிலீக்ஸ் தலைவரான ஜூலியன் அசாஞ்சையை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்ததான உத்தரவு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளைவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சி எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
நோர்வே நிலச்சரிவு: இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!
தெற்கு நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒன்பது கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒருவரின் சடலத்தை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். அந்த இடத்திலுள்ள பொலிஸ் நடவடிக்கையின் தலைவர் ராய் அல்க்விஸ்ட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
தரமற்ற தந்திரத்தை சீனா பயன்படுத்தி மோதலை எதிர் பார்க்கின்றது: தாய்வான் சாடல்!
சமீபத்திய பேச்சுவார்த்தைகளை மறுத்துவரும் சீனா, தரமற்ற தந்திரம் மற்றும் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டு மோதலை எதிர்பார்க்கின்றது என ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு உரையில், ‘பெய்ஜிங் மோதலை ஒதுக்கி வைக்க தயாராக இருந்தால், சீனாவுடன் சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் கொள்கைகளின்மேலும் படிக்க...
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார். சீன தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளநிலையில், இந்தமேலும் படிக்க...
நியூஸிலாந்தின் கெர்மடெக் தீவில் நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை கெர்மடெக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 10.0 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி ஆரம்பத்தில் 31.4319 டிகிரிமேலும் படிக்க...
கருக்கலைப்பை சட்ட பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!
அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த உற்சாகமான சார்பு தேர்வு பிரச்சாரகர்கள் கொண்டாட்டத்தில்மேலும் படிக்க...
யேமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – 26 பேர் வரையில் உயிரிழப்பு
யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- …
- 121
- மேலும் படிக்க