பிரான்ஸ்
கொரோனா : இல்-து-பிரான்சுக்குள் ஒரே நாளில் 164 பேர் சாவு
இல்-து-பிரான்சுக்குள் கடந்த 24 மணிநேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை மொத்தமாக 1999 பேர் இல்-து-பிரான்சுக்குள் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பிராந்திய சுகாதார நிறுவனம் (l’Agence régionale deமேலும் படிக்க...
பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தாக்குதல்
நேற்று நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டு பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அப்தெல்லா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் என்றும், இது ஒரு பயங்கரவாதக் குற்றச்செயல் என்றும், தேசிய பயங்கரவாத் தடுப்பு நீதிமன்றமான PNAT ( parquet national antiterroriste) தெரிவித்துள்து. இன்றைய தாக்குதலில்மேலும் படிக்க...
நாள் ஒன்றுக்கு 10,000 லிற்றர் கைகழுவும் ஜெல் தயாரிப்பு
பரிசில் உள்ள பிரபலமான மருந்தகம் ஒன்று, கை கழுவும் ஜெல் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்தவெளி வீதியில் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவுவதால், கை கழுவும் ஜெல் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இங்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிற்றர்மேலும் படிக்க...
கொரோனா – பிரான்சின் முன்னாள் அமைச்சர் மரணம்
பிரான்சின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொரோனா வைரசினால் சாவடைந்துள்ளார். Hauts-de-Seine மாவட்டத்தின் தற்போதைய ரீபபுளிகன் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான Patrick Devedjian என்பவரே உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய அவர் நேற்று இரவு கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை முதல் இவர்மேலும் படிக்க...
நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு
மார்ச் மாதத்தில் நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்கான முதல்வர் valérie pécresse இதனை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இச்சமயத்தில் மார்ச் மாசத்துக்கான நவிகோ மாதாந்த பயண அட்டையை பெற்றவர்கள்மேலும் படிக்க...
உள்ளிருப்புக் கட்டுப்பாடு ஏப்ரல் 15 வரையில் நீடிப்பு – பிரதமர்
பிரான்சில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் (CONFINEMENT) முதற்கட்டமாக, எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகிதி வரை நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து இது மேலும் நீட்டடிக்கப்படலாம் எனவும் பிரதமர்மேலும் படிக்க...
Covid-19 – Créteil வெளிநோயாளர் பரிசோதனை மையம் திறப்பு
Créteil ல் உள்ள ஹென்றி-மோண்டோர் ஏபி-ஹெச்பி ( L’hôpital Henri-Mondor AP-HP ) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான வெளிநோயாளர் பரிசோதனை மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது . இங்கே மருத்துவமனையின் அவசர சேவைகளுக்கு செல்லாமல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பிரான்சின் அவசர நோயாளர்மேலும் படிக்க...
Pôle emploi உதவித்தொகை ஒரு மாதம் நீடிப்பு
வேலை தேடும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு (chômeurs) கூடுதலாக ஒருமாதம் உதவித்தொகை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாதம் உதவித்தொகை முடியும் கட்டத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது .நேற்றைய தினம் 25ம் திகதி புதன்கிழமை அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சின் மூன்று விடயங்கள் பற்றிமேலும் படிக்க...
மருத்துவ மனைகளுக்கு நிதி சேர்க்கவுள்ள PSG அணி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி அளிக்க பரிஸ் உதைபந்தாட்ட அணி (PSG) முன்வந்துள்ளது. இதற்காக புதிய சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி வழங்க இந்த புதிய சீருடைமேலும் படிக்க...
பிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்
பிரான்ஸ் மக்கள் வெளியே செவ்லதற்கான புதிய அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இது (Attestation de déplacement dérogatoire) அரசின் புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. https://www.gouvernement.fr/sites/default/files/contenu/piece-jointe/2020/03/attestation-deplacement-fr-20200324.pdf எனும் முகவரியில் இந்தப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்தப் படிவம் மட்டுமேமேலும் படிக்க...
கொரோனா – பிரான்சில் சாவடைந்தோர் 1100: தொற்றுக்கு உள்ளானவர்கள் 2,448
இன்று பிரான்சில் கொரோனா வைரசினால் சாவடைந்தோர் தொகையானது 240 பேரினால் அதிகரித்து, 1100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் சுகாதாரத்துறை தலைமை அதிகாரி ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்க்கு உள்ளானவர்கள் 2,448 பேரினால் அதிகரித்து 22,304 ஆக அதிகரித்துள்ளது. அவசரசிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...
உள்ளிருப்புக் காலம் ஆறு வாரங்கள் நீட்டிக்க கோரிக்கை
உள்ளிருப்புக் காலமானது (CONFINEMENT) ஆகக்குறைந்தது ஆறுவாரங்களிற்குத் தொடரவேண்டும் எனப் பிரான்சின் Covid-19 விஞ்ஞான ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, ஜனதிபதியும் பிரதமரும், உள்ளிருப்புக் காலம் தொடர்பாக இவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளிருப்புக்காலம் ஆரம்பித்த 17 மார்ச் இலிருந்துமேலும் படிக்க...
சுகாதார அவசரகால நிலை பிரகடனம் – அரச வர்த்தமானி வெளியீடு
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சில வாரங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார அவசரகால நிலைப் பிரகடனத்திற்கான சட்டம் இன்று அரச வர்த்தமானியில் (Journal officiel) வெளியாகி உள்ளது. சில வாரங்களிற்கு வெளியே செல்வதும் வருவதும் கடுமையான சோதனைகளிற்கும் கட்டப்பாடுகளிற்கும் உட்பட்டு இருக்கும். Covid-19 இன்மேலும் படிக்க...
பிரான்சில் மூடப்படும் வீதியோர அங்காடிகள்
பிரான்சில் சந்தைகள் அனைத்தையும் மூடும் உத்தரவைப் பிரதமர் எதுவார் பிலிப் வழங்கி உள்ளார். உடனடியாகப் பரிசிலுள்ள திறந்த சந்தைகள் மூடப்படுகின்றன. பரிசிலுள்ள சந்தைகளை உடனடியாக மூடும் உத்தரவினைப் பரிசின் நகரபிதா அன் இதால்கோ அறிவித்துள்ளார். சந்தைகளில், ஒரு மீற்றர் பாதுகாப்பு எல்லையா னதுமேலும் படிக்க...
Pôle emploi – இனிமேல் தொலைபேசித் தொடர்புகள் மட்டும்!
உள்ளிருப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வேலை மேடுவோரிற்கான அவசர தேவைகளிற்காகவும், மிகவும் முக்கிய சந்திப்புக்களிற்காகவும், Pôle emploi திறந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் Pôle emploi அதிகாரிகளின் தொழிற்சங்கம் இதனை எதிர்த்து, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அனைத்துக் கிளைகளையும் மூடவேண்டும் எனப் பணித்திருந்தது. இதனால்மேலும் படிக்க...
மருத்துவர்கள், உதவியாளர்களுக்கு இலவச TGV பயணம்
கொரோனா வைரசுக்கு எதிராக பெரும் இடைவிடாத போராட்டத்தை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு தொடருந்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன. SNCF இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இடைவிடாது போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தாதிமார்களுக்கு TGVமேலும் படிக்க...
கொரோனா வைரசுக்கு மேலும் இரு வைத்தியர்கள் பலி
கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை இத்தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை Haut-Rhin மற்றும் Moselle மாவட்டத்தில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. உயிரிழந்த இருவரும் 60 மற்றும் 68 வயதுடையவர்கள்மேலும் படிக்க...
இதுவரை நாற்பதாயிரம் பேருக்கு தண்டப் பணம் அறவிட்ட காவல் துறையினர்
செவ்வாய்க்கிழமையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருங்கள் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. போதிய காரணம் மற்றும் ஆவணங்கள் இன்றி வெளியில் பயணிப்போருக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. அதுபோல் இதுவரை காவல்துறையினர் 867,695 பேரை அவர்கள்மேலும் படிக்க...
கொரோனா : கட்டுப்படுத்த தவறினால், பிரித்தானிய – பிரான்ஸ் எல்லையை மூடி விடுவோம் : பிரான்ஸ் ஜனாதிபதி
பிரித்தானியா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், பிரித்தானியாவுடனான, பிரான்சின் எல்லையை மூடுவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலும்,மேலும் படிக்க...
நீஸ் – 20h00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு
இன்று இரவு 20h00 மணியிலிருந்து நீஸ் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சேவைகளான மருந்தகங்கள் முதற்கொண்டு அனைத்தும் 20h00 மணிக்கு முதல் பூட்டப்படுவதோடு மக்கள் யாரும் வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், மருத்துவப் பணியாளர்கள், வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் போன்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 39
- மேலும் படிக்க
