Main Menu

RATP ஒரு பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.  பொதுபோக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொடருந்து நிறுவனங்களும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் வருவாய் இழப்பை SNCF சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றபோதும், முதல்கட்டமாக மூன்று பில்லியன் யூரோக்கள் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக RATP நிறுவனமும் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பை சந்தித்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...