உலகம்
ஜப்பானின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!
ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும் 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளனர். ஆளும்மேலும் படிக்க...
இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்- போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ஒருவர் கைதானார்!
பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் பயணித்த தாய் மீது குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தையடுத்து மூன்றாவது நாளாக பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்கள், குறித்த பெண்ணையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் வாகனத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாகமேலும் படிக்க...
ரஷ்ய கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்
கொரோனா வைரஸை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுப்பதற்காக ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசியமேலும் படிக்க...
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப் பட்டார்!
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை இன்று (சனிக்கிழமை) காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம்மேலும் படிக்க...
வரலாற்று சிறப்பு மிக்க ஆப்கான்- தலிபான் சமாதான பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!
பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் கட்டார் தலைநகர் டோஹாவில் ஆரம்பமாகியுள்ளன. இன்று (சனிக்கிழமை) டோஹாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், முக்கிய பேச்சாளர்கள் ஆப்கானிஸ்தானின்மேலும் படிக்க...
ரஷ்யாவில் உள்ளூராட்சித் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
ஆளும் கிரெம்ளின் சார்பு ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு ஒரு பெரிய சோதனையாகக் கருதப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் ரஷ்யா முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களில் கிட்டத்தட்ட 160,000 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் பிராந்தியங்களின் ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்மேலும் படிக்க...
கொலம்பியாவில் பொலிஸ் மிருக தனத்திற்கெதிரான போராட்டத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!
கொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். ஆனால், ஏழு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்றுமேலும் படிக்க...
அமெரிக்க அரசியல் கட்சிகளின் 200க்கும் மேற்பட்ட கணினிகளில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவல்!
அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனநாயகக் கட்சியை ஊடுருவிய அதே அமைப்பே இந்த முயற்சியினை மேற்கொண்டதாகமேலும் படிக்க...
நான்காயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ்!
உலகின் மிகப் பிரபலமான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தங்களது பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் லிமிடெட் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், இதனை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கையின் படி, தனது 4300 ஊழியர்களை பணிநீக்கம்மேலும் படிக்க...
ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்!
ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பமாகியுள்ளது. இந்த மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று (புதன்கிழழமை) ஆரம்பமானதாக சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார். இந்த மருத்துவ பரிசோதனையில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட காலமேலும் படிக்க...
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்ததுமேலும் படிக்க...
பாதுகாப்பை உறுதி செய்யாத தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாது – உலக சுகாதார அமைப்பு
குறைந்தபட்ச செயற்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்றமேலும் படிக்க...
சுயாதீன விசாரணைக்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா!
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒத்துளைக்குமாறு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டமை ஜேர்மனியால் உறுதிப்படத்தப்பட்டுள்ளதைமேலும் படிக்க...
சூடானில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாதகால அவசர நிலை பிரகடனம்!
சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மூன்று மாதகால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சூடானில் ஏற்பட்டுள்ள கடும் வௌ்ளம் காரணமாக பழைமை வாய்ந்த பிரமிட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சூடானில் நைல்நதிமேலும் படிக்க...
உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் சீனாவின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு!
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 9.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சீனா கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ரூ.17.64 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி குணமடைவு!
கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். போலந்தின் தெற்குப் பகுதியிலுள்ள டைஷி நகர மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கிரெகோா்ஸ் லிபின்ஸ்கிக்கு (45), இரு நுரையீரல்களும் மிகக்மேலும் படிக்க...
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 960மேலும் படிக்க...
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கொரோனாமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பு ஊசிகளை உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ளும் யுனிசெஃப்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து, உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொள்ளவுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு ஊசியைத் தயாரிக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- …
- 121
- மேலும் படிக்க