உலகம்
வட கொரியா மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியதாக தென் கொரியா தகவல்!
கொரியா ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரியா மகத்தான இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளதாக தெரிகின்றது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த ஆண்டு வெளியிடுவதாக உறுதியளித்த புதிய மூலோபாய ஆயுதங்களைக் காண உலகநாடுகளேமேலும் படிக்க...
ஸ்பெயினில் 15 நாட்கள் அவசரகால நிலை பிரகடனம்!
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாட்கள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒரு பகுதி முடக்கநிலையை நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, இந்த புதிய உத்தரவினை ஸ்பெயின் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.மேலும் படிக்க...
லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு- 20பேர் காயம்!
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு எரிபொருள் தாங்கி வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 20பேர் காயமடைந்தனர். இதுதவிர மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் செஞ்சிலுவை சங்கத்தினர்மேலும் படிக்க...
பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி!
பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்றமேலும் படிக்க...
உலகம் முழுவதும் அடுத்த ஆண்டில் 15கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 காடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்றுமேலும் படிக்க...
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு பல்வேறு நாடுகளும் அழைப்பு!
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜேர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழுமேலும் படிக்க...
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனாமேலும் படிக்க...
டுபாயில் திறக்கப் படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்றமேலும் படிக்க...
குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக மேலதிக கொடுப்பனவு வழங்கும் சிங்கப்பூர்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் மேலதிக கொடுப்பனவை வழங்குகிறது. தற்போதுள்ள தொற்றுநோய் பரவலினால், குடிமக்கள் நிதி பற்றாக்குறை, மன அழுத்தம் மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுடன் போராடுகையில், குழந்தை பெறும் திட்டத்தை பெற்றோர்கள்மேலும் படிக்க...
எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன
எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கைரோவில் (Cairo) உள்ள சக்காரா (Saqqara) எனும் கல்லறையில் 59 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். 12 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த மரச் சவப்பெட்டிகள், சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் – வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா வைரசை முறையாகக் கையாளவில்லை என்றும்மேலும் படிக்க...
துபாயில், உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று 22-ந் தேதி திறக்கப்படுகிறது
துபாய் நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புர்ஜ் கலீபா, துபாய் மால், புர்ஜ் அல் அரப், பால்ம் ஜுமைரா, பல்வேறு பொழுது போக்கு மையங்கள், கடற் கரை பகுதிகள் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும்மேலும் படிக்க...
நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு- முதல் நாளில் மருத்துவ துறைக்கான பரிசு
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கானமேலும் படிக்க...
தீ விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடம் இருந்து நட்ட ஈடு
தீப்பற்றலுக்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகை தீ அணைப்பிற்கு ஏற்பட்ட செலவிற்கான தொகையே அன்றி, கடல் மாசு ஏற்பட்டமைக்கான நட்ட ஈட்டு தொகை அல்ல எனமேலும் படிக்க...
சீனாவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் 4 நாடுகளின் பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்
சீனாவை முறியடிக்கும் வகையில், ஜப்பானில் தொடங்க உள்ள 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையான பேச்சு செவ்வாயன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான உலகத் தலைவர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள அரசாங்க கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நங்கர்ஹார் மாகாணத்தில் கானி கெல் மாவட்டத்தில் சில இராணுவ வசதிகளையும் வைத்திருந்த ஒரு நிர்வாக கட்டிடத்தின்மேலும் படிக்க...
அமேசான் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
சான் பிரான்சிஸ்கோ: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 19,800 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 1.37 மில்லியன்மேலும் படிக்க...
28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக வால்ட் டிஸ்னி அறிவிப்பு!
பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவனான வால்ட் டிஸ்னி நிறுவனம், 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த பணிநீக்கங்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் இருக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் 67 சதவீத பகுதிநேர வேலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- …
- 121
- மேலும் படிக்க