உலகம்
விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்!
தனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி சந்தேகிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவிருந்த ஜேர்மனி பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே இதனை அவர் கூறியுள்ளார். ‘இந்த குற்றத்தின் பின்னணியில் புடின்மேலும் படிக்க...
கொரோனா – நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் நெதர்லாந்து அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெதர்லாந்து மக்கள் வியாபார நிலையங்களுக்குள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிவதற்கு முதன் முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 17 மில்லியன் மக்கள்மேலும் படிக்க...
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளத்தைக் குறி வைத்து தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
ஸ்பெயினில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள்
ஸ்பெயின் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிராந்திய சுகாதார அதிகாரிகள் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி ஸ்பெயினில் 716,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில்மேலும் படிக்க...
ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக மேலும் ஆறு சவுதியர்கள் மீது துருக்கி குற்றச்சாட்டு
இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டமை தொடர்பாக மேலும் 06 சவுதி சந்தேக நபர்களுக்கு எதிராக துருக்கி சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களில் இருவர் மீது கடுமையான ஆயுள் தண்டனை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துருக்கிமேலும் படிக்க...
8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்
துபாயில் கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற 5 பெண் களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டது. துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்!
உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு மில்லியனைக் கடந்துள்ளன. இதன்படி, இதுவரையான உயிரிழப்புக்கள் பத்து இலட்சத்து 202ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
நெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக் கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினைக் தடுக்கும் நோக்கில் நாடு அதன் முடக்க கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கிய ஒரு நாள் கழித்து இந்தப்போராட்டம் இடம்பெற்றுள்ளது. உலகின்மேலும் படிக்க...
அவசரகால கொரோனா தடுப்பூசி பாவனைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு – சீனா
கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முழுமையாக நிறைவடைவதற்கு முன்னரே அதனை அவசரக்காலத் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஷெங் ஷோங்வேய் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியை அவசரக்காலத்மேலும் படிக்க...
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்!
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாகமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம்: WHO
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா,மேலும் படிக்க...
எதிர்பாராத, அவமான கரமான நிகழ்வு: தென் கொரியாவிடம் மன்னிப்புக் கேட்டார் கிம்
கொரியக் கடற்பகுதியில் தென்கொரியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மன்னிப்புக் கேட்டுள்ளார். தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு வடகொரியா ஜனாதிபதி கிம்மேலும் படிக்க...
கொரோனாவை போன்று பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் – உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா.பொதுச் செயலாளர்
உலக நாடுகள் ஒற்றுமை இல்லாமல் கொரோனாவை கையாண்டது போல பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அஞ்சுகிறேன் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்கள் (கோப்பு படம்)ஜெனீவா:அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வதுமேலும் படிக்க...
அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்!
தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அதில் 58.7 பல்லியன்மேலும் படிக்க...
இஸ்ரேலில் இதுவரை இல்லாத நாளொன்றுக்கான அதிக பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
இஸ்ரேலில் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இஸ்ரேலில், 11ஆயிரத்து 316பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்சமேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்!
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம் சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான விமானம் பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் நேற்று பஹ்ரைன் நாட்டை வந்தடைந்தது.மேலும் படிக்க...
அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப் படுகின்றன: பிரேஸில் ஜனாதிபதி!
உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகப் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தமேலும் படிக்க...
ஐரோப்பாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பிரான்ஸ்- ஸ்பெயினில் உச்ச பாதிப்பு!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாவது தொற்றலையாக பார்க்கப்படும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால், ஸ்பெயினில் மட்டும் கடந்த 24மணித்தியாலத்தில் 11ஆயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொலை!
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘மிருகத்தனமான செயல்’ என பாதுகாப்பு அமைச்சகம் கண்டித்துள்ளது. எல்லைக்கு அருகிலுள்ள ரோந்துமேலும் படிக்க...
கொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்
செக் குடியரசு மீண்டும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக செக் குடியரசு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது என உள்துறை அமைச்சர் ஜோன் ஹமாசெக் கூறினார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- …
- 121
- மேலும் படிக்க