Main Menu

நான்காயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ்!

உலகின் மிகப் பிரபலமான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தங்களது பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் லிமிடெட் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், இதனை உறுதி செய்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, தனது 4300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் ஆகும்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சிங்கப்பூர் எயார்லைன்ஸ் மற்றும் அதன் சில்க் எயார் மற்றும் ஸ்கூட் பிரிவுகளில் குறைப்புகள் செய்யப்படும். தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஏற்பாடுகள் இறுதி செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...