இந்தியா
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது – பிரியங்கா காந்தி
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது என பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்று அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169-ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நான்காம் கட்ட லாக்டவுன் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதுவரை 96,169,பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு
கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதியமேலும் படிக்க...
பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!
கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்டுள்ள நிலையில், பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என பிறத்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய உட்துறையின் செயலாளர் அஜெய் பல்லா வெளியிட்ட உத்தரவில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது – ஹர்ஷவர்தன்
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பிரதமர் மோடி தலைமையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 96ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 471 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அத்துடன் புதிதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3029 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரைமேலும் படிக்க...
தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் எதிர்வரும் மே-31 திகதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு அறிவித்த 3ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவுக்குவரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: வைகோ
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுவந்த ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்த மே 18ஆம் நாளின் 11 வருட நிறைவு நெருங்கியுள்ள நிலையில் வைகோ இக்கருத்தினைமேலும் படிக்க...
வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றது
வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளதால் தன்னிச்சையாகவோ, நடைபயணமாகவோ பிறவாகனங்களின் மூலமாகவோ, செல்லவேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6ஆம் திகதி தொடங்கிமேலும் படிக்க...
சென்னையை பகுதி வாரியாக பிரித்து புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறது – ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் தீட்டப்படுவதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாகமேலும் படிக்க...
ஊரடங்கை ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை – மருத்துவ நிபுணர் குழு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக தளர்வு செய்ய வேண்டும் எனவும், ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்துமேலும் படிக்க...
‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 இலட்சம்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், மொத்தமாக 78055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3763 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 134 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார். ஊரடங்கு நிலை, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகைமேலும் படிக்க...
ஊரடங்கு நீடிக்குமா? – மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.மேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த முதலாம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- …
- 137
- மேலும் படிக்க