Main Menu

இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169-ஐ எட்டியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நான்காம் கட்ட லாக்டவுன் தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போதுவரை 96,169,பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அங்கு 33,053பேர் பாதிக்கப்பட்டு 1,198 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில், இதுவரை 2.3மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பகிரவும்...