Main Menu

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், மொத்தமாக 78055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3763 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 134 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2551ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26400 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 49104 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை  தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சென்னையை சேர்ந்த மூவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் சென்னையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 380 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5262ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...