Main Menu

பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

ஊரடங்கு நிலை, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை உறைய வைத்துள்ள கொரோனாவால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியும் ஊரடங்கும்தான் சாத்தியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கியதை அடுத்து இந்தியாவிலும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள் முழு அடைப்பை பின்பற்றினாலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இதனையடுத்து ஏப்.14 முதல் மீண்டும் மே 3ஆம் திகதி வரை 18 நாட்களுக்கும் மேற்கூறிய 2 அறிவிப்புகளையும் பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து மே 4ஆம் திகதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சியின் மூலம் விவாதித்தார். இதனையடுத்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

ஊரடங்கை நீடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பேருந்து போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...