Main Menu

ஊரடங்கு நீடிக்குமா? – மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...