உலகம்
3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!
இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பஜீரா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த நகரம் 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும்மேலும் படிக்க...
ஹொங்கொங்க் போராட்டங்களுக்கு எதிராக சீன ஆதரவாளர்கள் பேரணி!
ஹொங்கொங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகவும், ஹொங்கொங் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்தும் சீனர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றைமேலும் படிக்க...
3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு!
3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில்மேலும் படிக்க...
வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை!
வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரை பார்வையிட்டதன் பின்னர் இத்தாலிய பிரதமர் கியூசெப் கான்டே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது வெனிஸ் நகரம். இதனைமேலும் படிக்க...
ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் – வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக தீவிர போராட்டம் – சாலைகளை முற்றுகையிட எதிர்க் கட்சிகள் முடிவு
பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடுகள் மூலம் இம்ரான்கான் வெற்றி பெற்றதாக ஜாமியக்மேலும் படிக்க...
யேமன் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து உதவி – சவுதி
யேமனுக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து வழங்குவதாக சவுதி தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சவுதி ஊடகத்துறை அமைச்சர் துர்கி அல் ஷபனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் “யேமன் நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டுமேலும் படிக்க...
கருணைக் கொலை குறித்த சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
கருணைக் கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத நம்பிக்கை அடிப்படையிலும், பிற காரணங்களுக்காகவும் அதிகளவானவர்கள் கருணைக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூஸிலாந்திலும் இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாத பொருளாக இருந்து வந்தது.மேலும் படிக்க...
இத்தாலியில் கடும் வெள்ளப்பெருக்கு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இத்தாலியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்றிரவு வரை 187 சென்டி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. புனித மார்க் சதுக்கம், பசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும்மேலும் படிக்க...
பொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை சபாநாயகர்
பொலிவியாவில் அரசியல் குழப்பத்திற்கு நடுவே அந்நாட்டு செனட்சபையின் துணை சபாநாயகர் ஜென்னி அனிஸ் புதிய அதிபராக தன்னைத்தானே அறிவித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றிமேலும் படிக்க...
வழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக் கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி
தாய்லாந்தில் வழக்கு விசாரணையின்போது, 2 வழக்கறிஞர்களை சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரியை நீதிமன்ற அறையிலேயே போலீசார் சுட்டுக்கொன்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது நிலப்பிரச்சனை தொடர்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர்மேலும் படிக்க...
ஜப்பானில் தொழில் செய்யும் பெண்கள் மூக்குக் கண்ணாடி அணிய தடை!
ஜப்பானில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்கள் மூக்குக் கண்ணாடி அணியக்கூடாது என அந்ம நாட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...
நிமோனியாக் காய்ச்சலால் 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு
நிமோனியாக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. நிமோனியாக் காய்ச்சலைத் தடுக்கமுடியும் என்றும், அதுமேலும் படிக்க...
டென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள்
Share Tweet அ-அ+ டென்மார்க்கில் யூதர்களின் கல்லறைத் தோட்டத்தின் 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள ராண்டெர்ஸ் நகரம் யூதர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கிட்டத்தட்ட 6,000 யூதர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள ஆஸ்ட்ரே கிர்கெகார்டு எனும்மேலும் படிக்க...
தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக் கழகம்
சவக்குழியில் படுத்திருக்கும் மாணவர்ஆம்ஸ்டர்டாம்:தேர்வுகள் என்றாலே மாணவர்கள் அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பொதுத்தேர்வுகள் என்றால் இன்னும் பரபரப்புடன் காணப்படுவார்கள். அந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததினால் தேர்வை கோட்டை விடுபவர்களும் உண்டு. தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வியினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக்மேலும் படிக்க...
ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு
ஈரானில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில்மேலும் படிக்க...
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி விடுதலை!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரேசிலில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுத் போது, அந்த தீர்ப்பை எதிர்த்துமேலும் படிக்க...
பொலிவியா: அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த போலீசார்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டிமேலும் படிக்க...
சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐ.நா பாராட்டு!
சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. ஏமன் அரசாங்கத்திற்கும், தென் பகுதியிலுள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- …
- 121
- மேலும் படிக்க