Main Menu

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி விடுதலை!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரேசிலில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுத் போது, அந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உள்ளூர் நீதிமன்றில் 3 முறையும், சுபீரியர் நீதிமன்றில் 1 முறையும், இறுதியாக சுப்ரீம் பெடரல் நீதிமன்றிலும் மேன்முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்த வாய்ப்பு வழங்கப்படாமல் லூயிஸ் சிறையில் அடைக்கப்பட்டதை சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை. இப்படி அவரை சிறையில் அடைத்தது அரசியல் சாசன கொள்கைக்கு எதிரானது என அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவானது. கியூரிடிபா மத்திய பொலிஸ் தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளாக வந்து வரவேற்று அழைத்து சென்றனர்.

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (வயது 74) மீது ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்மானித்து 8 ஆண்டுகளும், 10 மாதமும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதன் காரணமாக அவர் அங்கு கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஜனாதிபதி தேர்தலில் அவர் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்த போதும், முதல் சுற்றில் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரே வேட்பாளர் என கூறப்பட்டபோதும், தேர்தலில் நிற்க முடியாமல் போனது.

பகிரவும்...