இலங்கை
அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்
நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை ; மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்ட பின்னர் ஏனைய வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களுடன் அவற்றை ஒப்பிட்டு தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதி: முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாகமேலும் படிக்க...
சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும் பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது – விஜயகலா
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போதுமேலும் படிக்க...
9 மாதத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழப்பு : 3393 பேர் பாதிப்பு
இவ் வருடத்தின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் சந்திரிக்கா ஜெயக்கொடி, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளிகள் இவ் வருடத்தில்மேலும் படிக்க...
மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப் படுத்தும் உறுதிப் பத்திரம் பேராயரிடம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரியமேலும் படிக்க...
2015 ஆம் ஆண்டுக்கு முன் எம தர்மராஜ ஆட்சியே இருந்தது, எம தூதுவராக கோத்தாவே காணப்பட்டார் – பொன்சேகா
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
தமிழில் கதைக்க தடை: கொழும்பு கபே ஒன்று அறிவித்தல்!
தமிழில் கதைக்க தடை என கொழும்பிலுள்ள பிரபல கபே ஒன்று அறிவித்தல் பலகை மாட்டி அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது.#Peppermint_Cafe நிறுவனமே இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அங்கு பணியாற்றுபவர்கள் ஆங்கிலம், சிங்களம் மட்டுமே அங்கே கதைக்க முடியுமென அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரத்திற்கு சமூக வலைத்தளங்களில்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாஹ்வின் சுயநலத்துக்காக முஸ்லிம்கள் வாக்குகளைச் சிதறடிக்கக் கூடாது – ரவூப் ஹக்கீம்
ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது வாக்குளை வீணடிக்க முடியாது. சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடயங்களை அமுல்படுத்துவதற்கு காத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் சமூகத்துக்கு என்றும் விமோசனம் கிட்டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்மேலும் படிக்க...
சஜித்துக்கே வடக்கு மக்களின் வாக்குகள்- நலின் பண்டார
வடக்கில் 3இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்குமென அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நலின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “டக்ளஸ் தேவானந்த, பெரும் தொகை நிதியைமேலும் படிக்க...
லண்டனில் இருந்து நாடு திரும்பிய சந்திரிகா – முக்கிய முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு!
பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு நாடு திரும்பிய சந்திரிகா அம்மையார், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கும் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை சந்தித்துமேலும் படிக்க...
ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் தீர்மானம் குறித்து அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில்மேலும் படிக்க...
கோத்தாபய வென்றால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரம் தொடரும் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷமாரின் சர்வாதிகார ஆதிக்கத்துக்கு ஆளாகி விடுவோம் என்றும், நல்லாட்சியின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் அரசதுறைகளுக்கும் , அரச ஊழியர்களுக்கும் பெரும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல்மேலும் படிக்க...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது ; நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணிமேலும் படிக்க...
கோத்தாவின் விஞ்ஞாபனம் குறித்து விரைவில் அறிக்கை – சம்பந்தன்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இது தொடர்பான எமது நிலைப்பாட்டை விரைவில் அறிக்கையாக வெளியிடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல்மேலும் படிக்க...
போட்டியிலிருந்து விலகப் போவதுமில்லை ஏனையோருடன் இணையப் போதுமில்லை – மகேஷ் சேனாநாயக்க
ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலைமேலும் படிக்க...
மஹிந்த சிறையிலுள்ள பிள்ளையானை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது ஏன் ?
நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றால் ஆளுநர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் – கபே
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவதை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( கபே ) அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர
நாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (சனிக்கிழமை) கொழும்பில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் படிக்க...
ராஜபக்ஷ கும்பலை விரட்டி அடிக்க சஜித்தை வெற்றி பெறச் செய்வோம் – ரவூப் ஹக்கீம்
எதிர்க்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பிவருகின்றனர். அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- …
- 256
- மேலும் படிக்க