Main Menu

கோத்­தாவின் விஞ்­ஞா­பனம் குறித்து விரைவில் அறிக்கை – சம்­பந்தன்

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நாங்கள் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம். இது தொடர்­பான எமது நிலைப்­பாட்டை  விரைவில் அறிக்­கை­யாக வெளியி­டுவோம் என்று   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­பனம்  தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

கடந்த வௌ்ளிக்­கி­ழமை  தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ  பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை அமைத்து  புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக  தெரி­வித்­தி­ருந்தார்.  

அத்­துடன் நாட்டின் ஒற்­றை­யாட்சி முறை மற்றும் பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை என்­பன தொடர்ந்து  முன்­னெ­டுக்­கப்­படும்.  புதிய அர­சி­ய­ல­மைப்பில்  ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மத சுதந்­திரம் அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் முக்­கிய பகு­தி­க­ளாக இருக்கும்   நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகா­ண­சபை முறைமை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் என்­பன தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும்  என்று  கோத்­த­பா­யவின்  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இது  தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா. சம்­பந்தன் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நாங்கள் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.  அது தொடர்­பான  எமது நிலைப்­பாட்டை உள்­ள­டக்­கிய விரி­வான அறிக்­கையை  விரைவில் வெ ளியி­டுவோம். அதில்  அனைத்து விட­யங்­க­ளுக்கு பதில்கள் இருக்கும் என்றார்.

பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விடயங்கள் எவ்வாறு உள்ளன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன் அனைத்து  விடயங்கள் குறித்தும்  எமது அறிக்கையில் தெளிவாக பதிலளிப்போம் என்றார்.

பகிரவும்...