இலங்கை
அமைச்சருடன் மோத வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுங்கள்; நோயாளிகளைப் பழிவாங்க வேண்டாம்” – சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு எவ்வித அடிப்படையுமற்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடுமாறு அந்த சங்கத்திற்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கானமேலும் படிக்க...
கம்பஹாவில் பெண் படுகொலை: 76 வயது கணவர் கைது

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகவிற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்த சம்பவம் தொடர்பில் கம்பஹாமேலும் படிக்க...
வடக்குக்கான ரயில் சேவை ஏப்ரல் 9 முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டமேலும் படிக்க...
பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு

பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு: பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகமேலும் படிக்க...
பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்-கான சூழல் இன்று உருவாகி உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனூடாக 280மேலும் படிக்க...
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.மேலும் படிக்க...
ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்காமேலும் படிக்க...
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம் – மனோ கணேசன் எம்.பி

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர், 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும்,மேலும் படிக்க...
நிலவும் கடும் வெப்பம் – செல்லப் பிராணிகளுக்கு உயிராபத்து

தற்போது நிலவும் கடும் வெப்பம், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை வைத்தியர் சோபாத் விஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக கருப்பு நிற நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இந்த கடும் வெப்பம்மேலும் படிக்க...
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், நாட்டின் இரண்டு எரிபொருள் இறக்குமிடங்களில் ஏற்படும் நெரிசலே, எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேர்வதில் தாமதமாவதற்கு முக்கியக் காரணம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்மேலும் படிக்க...
பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இதற்கு அமைவாக இந்த மீனவர்கள் குழு நாளை (02) காலை நாடுமேலும் படிக்க...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
GMOA முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின்மேலும் படிக்க...
சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – சுமந்திரன்

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தைமேலும் படிக்க...
2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்றுமேலும் படிக்க...
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத்மேலும் படிக்க...
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம்மேலும் படிக்க...
எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 437
- மேலும் படிக்க
