Main Menu

லண்டனில் இருந்து நாடு திரும்பிய சந்திரிகா – முக்கிய முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு!

பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியுள்ளார்.

நேற்று இரவு நாடு திரும்பிய சந்திரிகா அம்மையார், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கும் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...