இலங்கை
தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்
தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்மேலும் படிக்க...
வெற்றி பெறுவதற்கு முன்னரே அகந்தையாக பேசுகிறார் கோத்தாபய – எம்.கே.சிவாஜிலிங்கம்
தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக பேசுகின்றார். அவர் வெற்றிபெற்ற பின்னரும் இவ்வாறே செயற்படுவார் அப்படியானால் நாம் நாட்டிலும் உலக அளவிலும் போராட நிர்ப்பந்திக்கப்படுவோம் என்றே கூற வேண்டும். அதன் படி எமது உரிமை போராட்டம் தொடரும்மேலும் படிக்க...
முல்லைத்தீவு சுதந்திர புரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரபுரம்மேலும் படிக்க...
அரசியல் தலையீடுகளற்ற புலனாய்வுப்பிரிவை ஸ்தாபித்து பாதுகாப்பை வலுப்படுத்துவோம்
கல்வியையும், அறிவையும் மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்குத் திட்டமிட்டிருக்கும் நாம் நவீன தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து இளைஞர், யுவதிகளிடமும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன்மேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்
நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும்மேலும் படிக்க...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு
வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித்மேலும் படிக்க...
என் கண் முன்னால் நடந்த இனப் படுகொலை – முள்ளி வாய்க்காலில் உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலம்
தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரித்தானியாவின் பொதுச்சபையில் கலையரசி கனகலிங்கம் என்ற சிறுமியின் உரை இனப்படுகொலையின் சாட்சியாக பதிவாகியுள்ளது. தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம்மேலும் படிக்க...
ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கம்!
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்திருந்தமேலும் படிக்க...
“சாத்தியமற்ற விடயங்களை முன் வைத்து பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்” – வரதராஜ பெருமாள்
ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துவிட்டு வேட்பாளர்களுடனும் பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர் என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 13 அம்சக்கோரிக்கைளைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழுக்கு பயணம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். அவர் கூறுகையில், “எதிர்வரும்மேலும் படிக்க...
சுய நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் கோத்தாபய – ஆசுமாரசிங்க
தனது நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் விதமாக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க குற்றம்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்தக்கொலைமேலும் படிக்க...
கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு
30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்பு பணியை ஆரம்பித்தது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளைமேலும் படிக்க...
இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை
ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்!: அடிப்படை வாதத்தை போதிக்கும் கற்கை நிலையங்கள் இல்லாது ஒழிக்கப்படும்
தேசிய பாதுகாப்பினையும் பொருளாதாரத்தினையும் பலமான தலைமைத்துவத்தினாலேயே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளுக்கும் தேசிய மரபுரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷநிச்சயம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். கடவத்தமேலும் படிக்க...
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
தமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற 13 அம்சக் கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றவை ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். ஆகவே தமிழ் மக்கள் தங்களின் உரிமைக் கோஷங்களை கைவிடாது நடைமுறைச் சாத்தியமானவற்றை முன்வைப்பதே பொருத்தமானதாகும். எனமேலும் படிக்க...
சஹ்ரானுடன் நெருக்கமாக செயற் பட்டவர்களை புகைப் படங்களுடன் அம்பலப் படுத்துவேன் – ஹக்கீம்
சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார். பாராளுமன்றில் சிறப்புரிமைக்கேள்வியொழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஹ்ரானும் தானும் நெருக்கமாக இருந்த காணொளிகள்மேலும் படிக்க...
சுதந்திர கட்சி பலமிழந்துமைக்கு சந்திரிகா பொறுப்பு கூற வேண்டும் : தயாசிறி
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி வரலாற்று சாதனை மிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்த எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வியான சந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவை காப்பாற்ற செயற்படுகின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போது சுதந்திரமேலும் படிக்க...
மக்களை வாழ வைக்கத் துடிப்பவர் ஜனாதிபதியா? மக்களை கொன்று குவித்தவர் ஜனாதிபதியா?: திகா
நாட்டில் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா அல்லது மக்களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்பாங்குடைய ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா என்பதை மலையக மக்கள் ஒப்பிட்டுபார்த்து தேர்ந்தெடுக்கமேலும் படிக்க...
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தியது சந்திரிக்கா – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை. நாங்களும் அந்த கட்சியின் பங்காளியாவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் அகுனுகொலபெலஸ்சமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- …
- 256
- மேலும் படிக்க