இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில்மேலும் படிக்க...
“சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை”
தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். 21/4 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா எனமேலும் படிக்க...
தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சரத் பொன்சேகா
தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை : ரவிகரன்
அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியன்மேலும் படிக்க...
பெரமுனவுடன் சு.க இணைந்து செயற்பட தவறினால் எதிர்காலம் இல்லாமல் போகும் : வாசுதேவ
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிலரே தடையை ஏற்படுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவறினால் எதிர்காலம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது எனமேலும் படிக்க...
கோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வெள்ளிக் கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவீர்களாமேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ருவன் குணசேகர
அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமானமேலும் படிக்க...
வடக்கு செல்ல தயாராகும் தேசிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்மேலும் படிக்க...
தீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் – சம்பிக்க ரணவக்க
ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தீர்வு காணும் நிலையில் உள்ளது. என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கமேலும் படிக்க...
“தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்”: ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார
இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும்மேலும் படிக்க...
பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் : த .தே. கூ
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும்மேலும் படிக்க...
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியின் பதவிக்காலம் நீடிப்பு
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் இந்த நீடிப்பு வழங்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாகமேலும் படிக்க...
சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர்
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில்மேலும் படிக்க...
இராணுவத் தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது – சந்திரகாந்தன்
புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார். இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமிமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்
ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது. ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்துமேலும் படிக்க...
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை: அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கண்காணிப்பகம் கோரியுள்ளது.மேலும் படிக்க...
எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரல்மேலும் படிக்க...
எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள்: ஐ.தே.க
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பதுமேலும் படிக்க...
த. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்டமேலும் படிக்க...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்ட வேண்டும் என வலியுறுத்த கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம் “ என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) ஏற்பாடு மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- …
- 256
- மேலும் படிக்க