Main Menu

கோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வெள்ளிக் கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவீர்களா என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குமார வெல்கம, அவர் இலங்கை குடிமகன் தானா என ஊடகவியலாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துணியொன்றினை இடுப்பில் கட்டிக்கொண்டிருக்கும் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதற்கு முன்னரும் பல தடவைகள் அதிருப்தியான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...