Main Menu

“சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை”

தற்போதைய சூழலில்  இலங்கைக்கு  வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார்.

21/4 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா என இன்டர்போல் செயலரிடம்  ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு,  அதற்கு இலங்கையின் அதிகாரிகள் பதிலளிப்பதற்காக விட்டுவைப்பதாக கூறியதையடுத்து, அது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்கவிடம் வினவினர்.

இதன்போதே தற்போதைக்கு அவ்வாறான வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...