Main Menu

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. 

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சென்றனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல்போன உறவினர்களை ஒப்படைக்குமாறும் அரசு நீதியைத் தர வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர். 


இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச. சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

பகிரவும்...