Main Menu

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியின் பதவிக்காலம் நீடிப்பு

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் இந்த நீடிப்பு வழங்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரது பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...