இலங்கை
நாட்டை அபிவிருத்தி செய்ய சர்வாதிகாரம் தேவையில்லை – பிரதமர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் நாங்கள் யாரையும் ஒழித்துக்கட்டவில்லை.மேலும் படிக்க...
ஐ.தே.க. சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதேமேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்!
இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் அவரது இழப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ கணேசன்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த அமைச்சரவை பத்திரம்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்
வெகு விரைவில் வெளியில் வந்து தமது குடும்பங்களோடு சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மிடம் வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துமேலும் படிக்க...
இந்து–சைவ சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை
உங்கள் ஊர் தேடி வரும், இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக இம்மாதம் 10ம் திகதி வடகொழும்பிலும், 17ம் திகதி தென் கொழும்பிலும், 18ம் திகதி அவிசாவளையிலும் நடைபெறும். ஏனைய மாவட்டங்களிலும் இது உடனடியாக இந்த நடமாடும் சேவை நடத்தப்படும். இதில் இந்து குருமார்கள். அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்துமேலும் படிக்க...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே கைகலப்பு – நால்வர் காயம்
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின மாணவர்களுக்கு இடையே கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் பெரும்பான்மையின மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடுமேலும் படிக்க...
ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை
போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
யாழில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் தங்கேஸ்வரி (வயது -72) என்பவரே உயிரிழந்துள்ளார். மூத்தமேலும் படிக்க...
மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் நேற்று (06.08.2019) செவ்வாய்க் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 05.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணிமேலும் படிக்க...
ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – சாகல
அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன போதும் ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்றுமேலும் படிக்க...
சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து – தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர்
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கைமேலும் படிக்க...
தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்த சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன ; ஜனாதிபதி
நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளினதும் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்மேலும் படிக்க...
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்: சஜித்
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித்மேலும் படிக்க...
மைத்திரி மகிந்த சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்புப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலமான குருணாகல் மாவட்டமேலும் படிக்க...
அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப் படுவதாக குற்றச்சாட்டு !
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. மற்றொரு பயங்கரவாத தாக்குதல் குறித்த வதந்தி முற்றிலும்மேலும் படிக்க...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்மேலும் படிக்க...
இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். திருமதி. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்கமேலும் படிக்க...
மூன்றாவது அணி சாத்தியமில்லை – கெஹெலிய
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சுதந்திரக் கட்சியினர் இணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவ்வாறு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல் சூழல் தற்போது இல்லை என்று மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெலமேலும் படிக்க...
ஆக்கபூர்வ செயற்பாடுகள் முன்னெடுக்கா விட்டால் மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- …
- 256
- மேலும் படிக்க