Main Menu

பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் : த .தே. கூ

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது.

 தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

 இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து, அவற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

பகிரவும்...