Main Menu

இஸ்ரேலில் இதுவரை இல்லாத நாளொன்றுக்கான அதிக பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!

இஸ்ரேலில் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இஸ்ரேலில், 11ஆயிரத்து 316பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 40பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக செப்டம்பர் 16ஆம் திகதி ஆறாயிரத்து 63பேர் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. தற்போது அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மடங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.

இஸ்ரேலில் தேசிய முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ள போதும், அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில், இதுவரை இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 690பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 58ஆயிரத்து 402பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 657பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 44ஆயிரத்து 963பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...