Main Menu

டுபாயில் திறக்கப் படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த புதிய நீரூற்றானது கடல் பகுதியில் 14000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீற்றர்  உயரம் வரை செல்லும் எனவும் 3000 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமையினால் பல வண்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...