Author: trttamilolli
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி என்.ஐ.ஏ.இ E-mail முகவரிக்கு பிரதமர் மோடி கொலை செய்யப்படமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா!
ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க செலுத்த வேண்டிய 12 கோடி டொலரில் 5.2 கோடி டொலர் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. இந்தமேலும் படிக்க...
இறுதிப் பருவத் தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்படும் – அன்பழகன்
இறுதிப் பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், “பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தோ்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும். இணையவழியில் தோ்வெழுதுவதா அல்லது நேரில் வந்து தோ்வெழுத வேண்டுமாமேலும் படிக்க...
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ்
கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்குமேலும் படிக்க...
சாதாரண அரசியல் வாதிகளுக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா
நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
விசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலையாகினர் ரணில் மற்றும் ஹக்கீம்
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020)
டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திசாந்த் 4ம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்த நாளை அக்காமாருடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை அன்புமேலும் படிக்க...
இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 83 வயதான சில்வியோ பெர்லஸ்க்கு கொவிட்-19 அறிகுறி தென்படவில்லை எனவும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும்மேலும் படிக்க...
தி.மு.க.வின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர்
தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் குறித்த இரு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகனின்மேலும் படிக்க...
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங் கொடுத்த இலங்கைக்கு நோர்வே பாராட்டு!
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அந்த சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கேடல் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனமேலும் படிக்க...
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றம்: அலுவல் மொழிகள் ஐந்தாக அதிகரித்து அமைச்சரவை ஒப்புதல்!
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரமான 370ஆம் பிரிவுமேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு – வர்த்தமானியில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம்மேலும் படிக்க...
வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப் பட மாட்டாது- ஜனாதிபதி
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாகமேலும் படிக்க...
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்!
பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல்மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 03ம் திகதி செப்டெம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் அமரர் திருமதி புவனேஸ்வரிமேலும் படிக்க...
ரஷ்யாவின் எதிர்க் கட்சித் தலைவரின் உடலில் நோவிச்சோக்: சர்ச்சையில் சிக்கியது ரஷ்யா!
ரஷ்யாவின் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையில் சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நோவிச்சோக் (Novichok) நச்சுப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் ஒரு சிறப்பு இராணுவ ஆய்வகம் நடத்திய சோதனையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
‘சார்லி ஹெப்டோ’ படுகொலை – சந்தேக நபர்கள் மீதான விசாரணை ஆரம்பம்
பிரான்ஸின் கேலிப் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ மீது கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், குறித்த சர்ச்சைக்குரிய முகமது நபியின் கேலிச்சித்திரத்தைமேலும் படிக்க...
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – டிலான் பெரேரா
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 374
- 375
- 376
- 377
- 378
- 379
- 380
- …
- 827
- மேலும் படிக்க