Main Menu

31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 03ம் திகதி செப்டெம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய தினம் அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்களை நினைவு நினைவு கூருபவர்கள் அன்புக்கணவர், அன்புபிள்ளைகள் ஸ்ரீரங்கன் (அறிவிப்பாளர் தர்ஷன்) ஸ்ரீ ரமணன், ஸ்ரீ தாரணி, அன்பு மருமக்கள் சாந்தினி, இதயராணி (தீபா) காலம் சென்ற சேகர், பேரப்பிள்ளைகள் தர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், யதுர்சிகா, ஆதவன், அபிஷேக், லக்சிகா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இணைந்து தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றார்கள்.

அமரர் ஆசிரியர் நீலா ரீச்சர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய TRT தமிழ் ஒலி அனைத்து உறவுகளும் அன்பு நேயர்களும் இறைவனை பிரார்தித்துக் கொள்கின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு நேயர்கள் ஜேர்மனியில் வசிக்கும் திரு.திருமதி. சத்தியநாதன் குடும்பத்தினர்.

அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

இல்லறப்பூங்காவில் இனிய நல்மனையாளாய்
முத்துச் சுடரெனவே மூன்று நன்மக்களை
முந்து வினையால் பெற்று முறையாய் வளர்த்தீர்கள்
அவையில் முந்தி இருக்கக் கண்டு
அகமும் மகிழ்ந்தீர்கள்!

ஆசானாய் இருந்து ஆற்றுப்படுத்தியவரே
நற்றவத்தால் மற்றவரும் சிறப்படைய வாழ்ந்தவரே
நித்தியமாய் நினைத்திருப்போம் நாளும் உங்களை!

போற்றத் தக்கதாய் வாழ்ந்த
போற்றத்தக்க தாய் நீங்கள்
அமைதியுடன் இறையடியில்
ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டும்!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

பகிரவும்...