Main Menu

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி  என்.ஐ.ஏ.இ E-mail  முகவரிக்கு பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் mail  ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து  பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி.இ பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மெயில் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து குறித்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...