Year: 2019
சம்பிக்க ரணவக்கவின் கைது குறித்து அரசாங்கம் விளக்கம்
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் சட்டத்தை ஏமாற்றிய நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையே இது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்மேலும் படிக்க...
வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றி காணிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இதுவரை அகற்றப்படாமல் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றி அக்காணிகளுக்குரிய உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்குமாறு அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படடுள்ளது. மீள் குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும்மேலும் படிக்க...
சர்வதேசத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ்
தனக்கு சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள வாடி வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்குமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக எஸ்.எம்.சார்ள்ஸ் ?
வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதாரமேலும் படிக்க...
ஓமந்தையில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது
ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (19.12) துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினைமேலும் படிக்க...
சம்பிக ரணவக்க கைதானமை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் : திஸ்ஸ அத்தநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் சர்வ மதத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்மேலும் படிக்க...
“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )
நல்லை நகர்ப் பதியினிலே எல்லையில்லாப் புகழ் நாவலர் வல்ல தமிழை வளமுறக் காக்கவே மார்கழித் திங்கள் பதினெட்டிலே ஞாயிறாய் உதித்தார் நற்றமிழுக்காய் ! தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்திடவே திடமான மனதுடனே தீவிரமாய் பணியாற்றி புராண ஆகமங்களை பல்லுலகும் அறியும் வண்ணம்மேலும் படிக்க...
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆராய பிரான்ஸ் புதிய அரசியல்வாதியை நியமித்துள்ளது!
பிரான்ஸின் ஓய்வூதிய முறைமைக்கான சீர்திருத்தங்களை ஆராயும் புதிய அரசியல்வாதியாக லோரன்ற் பியற்ராஸ்செவ்ஸ்கி (Laurent Pietraszewski) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த அதிகாரி சார் ஜீன்-போல் டெலவோய் (tsar Jean-Paul Delevoye) ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது!
துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்படமேலும் படிக்க...
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேர் பத்திரமாக மீட்பு: தொடர்ந்தும் மீட்பு பணிகள் தீவிரம்!
தென்மேற்கு சீனாவின் சண்முஷு நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தினுள் உள்ள இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டினர். இதையடுத்து அப்பகுதியின்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.தீர்மானம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.வின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கானமேலும் படிக்க...
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இஸ்லாமியமேலும் படிக்க...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் டக்ளஸ் – அவசர கடிதம்!
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள்; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் நீரக வள மூலங்கள்மேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் பாதுகாப்பு செயலாளர் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்புமேலும் படிக்க...
கூட்டமைப்பு , விக்னேஷ்வரன் போன்றவர்கள் பாரம்பரிய இனவாத அரசியலிலிருந்து மாற வேண்டும்: திலும் அமுனுகம
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் ஆகியோர் இனவாதத்தை பேசியே மக்களாணையினை பெற முயற்சிக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி கிடைக்கப் பெற வேண்டுமாயின் பாரம்பரிய அரசியல் தீர்மானங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 15/12/2019
ஜெனிவாவில் வஞ்சிக்கப்படட தமிழ்மக்களின் மனித உரிமையை பாதுகாக்க அமைப்பு ரீதியாக செயற்படுபவர்கள் தங்கள் சொந்த நலனிற்க்காக சட்ட விரோத நடவடிக்கைளில் குறிப்பாக ஆட்கடத்தல் மற்றும் வேறு பல நடவடிக்கைளில் ஈடுபடுவது தொடர்பாக தற்பொழுது வந்துள்ள செய்திகள் இந்த அமைப்பினரே பல மட்டங்களில்மேலும் படிக்க...
சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமானமேலும் படிக்க...
டெல்லியில் மீண்டும் வன்முறை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல்
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் சீலாம்பூரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதன்போது ஏராளமான பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதுடன், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுமேலும் படிக்க...
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து கமல்ஹாசன் கருத்து
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் தப்பித்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களின் நிலை என்னவென மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி யெழுப்பியுள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
காணாமல் போனவர்களை மீளக்கொண்டுவர முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் இடம்பெற்றது. காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் ஆனால் அவர்களை மீளக்கொண்டுவர முடியாதெனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 217
- மேலும் படிக்க