Year: 2019
ராஜித வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே!- உதய கம்மன்பில
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உதயமேலும் படிக்க...
தேசிய கீதம் பாடுவது நல்லிணக்கத்தை குழப்பாது – துரைராஜசிங்கம்
தேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
சம்பந்தன் தொடர்பாக எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான முடிவு சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் இன பாகுபாடுகளுக்கு எதிராக கொள்கையை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர்மேலும் படிக்க...
ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டைமேலும் படிக்க...
கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது எதிர்காலம் திட்டம் குறித்து பேசிய அவர், களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தினர். நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். லாங் ஐலன்டில் நடந்த பேரணியில்,மேலும் படிக்க...
முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல்
பிபின்ராவத் நியமனம்? முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் என தகவல் அண்மையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவியில்மேலும் படிக்க...
உக்ரைன், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கைதிகள் பரிமாற்றம் ஆரம்பம்!
உக்ரைனுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை!
லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்றமேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று வெளியீடு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்படவுள்ளன. ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை கடந்த சனிக்கிழமை முதல்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிணையில் விடுதலை!
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் குறித்த பெண் ஊழியர் இன்று (திங்கட்கிழமை) காலை விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தவகையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதிமேலும் படிக்க...
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுமேலும் படிக்க...
வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் அனுசரனையை பெற அமைச்சர் திட்டம்!
தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை தொழிற் பயிற்சிமேலும் படிக்க...
வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – ஆனந்தசங்கரி
வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது தமிழரசுக் கட்சி நிம்மதியாக வாழ விடவேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சியே காரணம். இந்நிலையில் இவர்கள்மேலும் படிக்க...
கனடிய உணவகத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!
கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்றமேலும் படிக்க...
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனைமேலும் படிக்க...
2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணிமேலும் படிக்க...
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வழுரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. வந்தவாசி ஒன்றியத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வழுர் கிராமத்தில், வாக்காளர்களுக்கு புடவைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 217
- மேலும் படிக்க