Main Menu

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மன்னர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஸ்வீடன் அரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...