இலங்கை
ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையமேலும் படிக்க...
யாழ்.மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது- அரச அதிபர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ். மக்களுக்கு 940 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர்மேலும் படிக்க...
தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்- கிழக்கு இந்துகுருமார் ஒன்றியம்
சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும் என கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ. க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் காலத்தில் தொழிலாளர் விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும்மேலும் படிக்க...
வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்களுக்கு விடுமுறை கோரிக்கை!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.மேலும் படிக்க...
எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ
எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனாமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!
நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரைமேலும் படிக்க...
மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்மேலும் படிக்க...
கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்!
கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும், விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர்மேலும் படிக்க...
அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம். தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால்மேலும் படிக்க...
பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு!
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளது. தனிமைப்படுத்தல்மேலும் படிக்க...
தற்போதுள்ள அச்சமான சூழலில் இராணுவத்தினருக்கு பாடசாலைகளை வழங்கமுடியாது
அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர்மேலும் படிக்க...
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் முல்லைத்தீவில் மாணவி எடுத்த தவறான முடிவு !
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் . இந்த சம்பவம் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்றையதினம் (28) இடம்பெற்றுள்ளதுமேலும் படிக்க...
COVID 19 க்கான தகவல்களுக்காக தேசிய இணையதளம்
COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக தேசிய இணையதளமொன்றைமேலும் படிக்க...
பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பாதிப்பாக அமையும்
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்களுக்கும் பாதிப்பாக அமையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் -19 பரவலை தடுப்பதற்கானமேலும் படிக்க...
எந்தவொரு பாடசாலையையும் தனிமைப் படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை
நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடமைக்கு சமூகமளிக்குமாறு முப்படை வீரர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- …
- 257
- மேலும் படிக்க