Main Menu

தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பாதிப்பாக அமையும்

தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்களுக்கும் பாதிப்பாக அமையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இருமல், சளி, தொண்டை புண் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 1999 அல்லது 1390 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறானவர்களால் வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அவ்வாறான நபர்கள் தாம் வசிக்கும் இடத்தை பிழையாக குறிப்பிடுவதாலும் பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...